இளைஞர்களிடம் பெரும்தொகை பணத்தை ஏமாற்றிய பிரபல அரசியல்வாதி
இளைஞர்கள் குழுவொன்றுக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு வழங்குவதாக கூறி 20 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்தேகம தொகுதி அமைப்பாளர் மலிக் குணவர்தனவை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். காலி, ரத்கம, புஸ்ஸ, யக்கலமுல்ல மற்றும் அங்குலகஹா பிரதேசங்களில் இளைஞர்கள் குழுவொன்று இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபருக்கு எதிரான குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை காலி நீதவானிடம் காலி பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர். […]













