பொழுதுபோக்கு

பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம்!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக தியாராய நகரில் உள்ள இளையராஜாவின் […]

இலங்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் கப்பல் கடத்தப்பட்டதாக தகவல்!

  • January 27, 2024
  • 0 Comments

சோமாலிய கடற்கொள்ளையர்களால் பல நாள் பயணக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி ஹலவத்த, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லொரென்சோ சோன் 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலையும், 06 மீனவர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் இருந்து 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் […]

ஐரோப்பா

77 வீரர்களின் உடல்களை உக்ரைனுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா : தொடரும் மர்மம்

ரஷ்ய இராணுவ விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு, 77 வீரர்களின் உடல்களை ரஷ்யா திருப்பி அனுப்பியதாக உக்ரைன் அறிவித்துளளது. புதனன்று ரஷ்யாவின் மேற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கும், உடல்கள் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டதற்கும் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் போர் முழுவதும் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகள் பல பரிமாற்றங்களில் விடுவிக்கப்பட்டனர், ஆனால் உக்ரேனிய கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் கூற்றுகள் அத்தகைய பரிமாற்றங்களின் […]

இலங்கை

கிளிநொச்சியில் மின்கம்பத்தை முறித்துக்கொண்டு பாய்ந்து விபத்துக்குள்ளான பேருந்து!

  • January 27, 2024
  • 0 Comments

கிளிநொச்சியில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் பேருந்து ஒன்று இன்று (27.01) விபத்துக்குள்ளாகியுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தை முறித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளது. இவ்விதத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!

  • January 27, 2024
  • 0 Comments

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் சுமார் 930,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (26) பிற்பகல் முறைப்பாடு கிடைத்துள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 25ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படிவெல பிரதேசத்தில் வீதியின் இடதுபுறத்தில் சிவில் உடையில் வந்த இருவரில் ஒருவர் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு தாம் குளியாப்பிட்டிய பொலிஸாரென்று கூறி சாரதி […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. ஆதரவாக சக பயணிகள்!

  • January 27, 2024
  • 0 Comments

மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் கவுதமாலா நாட்டிற்கு ஏரோமெக்சிகோ பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் பயணிகள் ஏறி அமர்ந்து நீண்ட நேரம் ஆகியும் புறப்படவில்லை. பராமரிப்பு பணி தொடர்பான எச்சரிக்கை காரணமாக புறப்படுவதில் தாமதம் ஆனது. இந்நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர், அவசரகால கதவை திறந்துகொண்டு வெளியேறி, விமானத்தின் இறக்கையில் நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை விமான நிலைய ஊழியர்கள் பிடித்து […]

இலங்கை

இலங்கை : கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு!

  • January 27, 2024
  • 0 Comments

பரீட்சை திணைக்களத்தினால் வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான பிரதேச செயலகப் பிரிவுகளின்படி நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27.01) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளின்படி 2002 கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விரைவில் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் அரச சேவைக்குள் […]

உலகம்

உலகின் மிகப் பெரிய கப்பலின் முதல் பயணம் 10 ஆயிரம் பயணிகளுடன் ஆரம்பம்

உலகின் மிகப் பெரியதாக கருதப்படும் கப்பல், தனது முதல் சேவை நேற்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது. உலகின் மிக நீளமான பிரம்மாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் […]

உலகம்

ஐ.நா பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் : மனிதாபிமான உதவிகள் தடைப்படும் அபாயம்!

  • January 27, 2024
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனத்தில் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் அவர்கள் பங்கு பெற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டிய நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. நிவாரண மற்றும் பணி முகமை அல்லது UNRWA பணியாளர்கள், இதற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற “செய்திகளால் திகிலடைந்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பரிந்துரைக்குமாறும்  ஏஜென்சியின் தலைவரை வலியுறுத்தினார். இந்த […]

இலங்கை

நுவரெலியா கிரகரி வாவியில் மிதந்த ஆணின் சடலம்

  • January 27, 2024
  • 0 Comments

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இன்று (27) காலை சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.இவ்வாறு சடலமாக மிதப்பவர் இராமன் பத்மநாதன் வயது (64) என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். […]