இந்தியப் பெருங்கடலில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தும் இந்தியா மற்றும் பிரான்ஸ்!
தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகையைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளின் தலைவர்களும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பொதுவான பார்வையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் மீண்டும் வலியுறுத்தினர். அத்துடன் அந்தந்த இறையாண்மை […]













