இலங்கை

பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் சுமார் 930,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (26) பிற்பகல் முறைப்பாடு கிடைத்துள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 25ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படிவெல பிரதேசத்தில் வீதியின் இடதுபுறத்தில் சிவில் உடையில் வந்த இருவரில் ஒருவர் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு தாம் குளியாப்பிட்டிய பொலிஸாரென்று கூறி சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.பின்னர் சாரதி முச்சக்கரவண்டியை விட்டு இறங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளார். அங்கு சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியை ஓட்டுவதற்கு இந்த சாரதி அனுமதிப்பத்திரம் செல்லாது எனவும் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Trishaw crashes into police sergeants injuring one – Sri Lanka Mirror –  Right to Know. Power to Change

அதன்படி பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்காக சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் சாரதியை ஏற்றியதுடன், மற்றைய சந்தேக நபர் முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார்.பின்னர் கதுருகாஸ் சந்தி பகுதியில் சந்தேகநபர்கள் சாரதியை கைவிட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையடித்துள்ளனர்.

சிவில் உடையில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை சோதனை செய்வதற்கு சமிக்ஞை செய்யும் போது, ​​உத்தியோகத்தர் பொலிஸ் சீருடையில் இருப்பது கட்டாயம் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைகளின் போது, ​​சிவில் உடையில் வாகனங்களை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயல்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content