இலங்கை

தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் 12 வயது மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்

  • February 3, 2024
  • 0 Comments

சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் உடல் நசுங்கி இன்று பலியாகினார். குறித்த சிறுவன் பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இதன் போது சம்மாந்துறை பிரதான […]

வட அமெரிக்கா

சிலியில் வனப்பகுதிக்குள் திடீரேன காட்டுத்தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு

  • February 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை […]

பொழுதுபோக்கு

கமல் கைக்கு போன சிவகார்த்திகேயன் பட டைட்டில்… என்னவா இருக்கும்?

  • February 3, 2024
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த வரவேற்பு மற்றும் வசூல் அவரை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உற்சாகமாக நடைபோட செய்து வருகிறது. தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், பிரபாசின் கல்கி 2898 AD படங்களில் நடிக்க வைத்துள்ளது. மேலும் மணிரத்னத்தின் தக் லைப் படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் கமல்ஹாசன். மேலும், கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள SK21 படத்தின் சூட்டிங் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது. […]

ஆசியா

பாகிஸ்தான் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம்..

  • February 3, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே வருகிற 8ம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேர்தல் களை கட்டி உள்ளது. இதனிடையே அவ்வப்போது […]

அறிந்திருக்க வேண்டியவை

500 பேர் வசிக்கும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவு! எங்கு இருக்கிறது தெரியுமா?

கொலம்பியாவின் கடற்கரையில் உள்ள சாண்டா குரூஸ் டெல் இஸ்லோட் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட தீவாகும். இந்த தீவு சுமார் 12,000 சதுர கெஜம் பரப்பளவில் உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. ஆனால் இது மிகவும் சிறியதாக இருந்தாலும், இங்கு சராசரியாக 500 மக்கள் வசிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. மீன்பிடித்தல் காரணமாக அதன் மக்கள்தொகை வளர்ந்தது, ஆனால் அது காலநிலை மாற்றம் மற்றும் நிலையான நடைமுறைகள் காரணமாக சவால்களை சந்திப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. 2017 […]

ஐரோப்பா

சிரிய பிரதேசத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ‘தொடர முடியாது: இராணுவம் எச்சரிக்கை

சிரிய பிரதேசத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ‘தொடர முடியாது’ என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது ஒரே இரவில் நடந்த தாக்குதல்களில் “பல பொதுமக்கள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது” என்று சிரிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து அனைத்து சிரியப் பகுதிகளையும் விடுவிக்க இராணுவத்தின் உறுதியை உறுதிப்படுத்துவதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் புத்தகங்களுக்கும் 18 வீதம் வரி விதிக்க நடவடிக்கை!

  • February 3, 2024
  • 0 Comments

புத்தகங்களுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு கல்விப் பணிகளை மேற்கொள்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் அகலக்கட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் கல்வியறிவற்ற தலைமுறையை உருவாக்கும் அரசின் முயற்சியே இந்த நடவடிக்கை என்று அவர் கூறுகிறார். இந்த வரி விதிப்பினால் படைப்பாற்றல் இலக்கியம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை

இலங்கை : கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

  • February 3, 2024
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர், இன்று (03.02) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், வைத்தியரின் பரிந்துரையின் பேரில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உலகம்

ஏதென்ஸில் அமைச்சகத்திற்கு வெளியே வெடிகுண்டு வெடிப்பு

மத்திய ஏதென்ஸில் உள்ள கிரீஸின் தொழிலாளர் அமைச்சகத்திற்கு வெளியே ஒரு வெடிபொருள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை என்று கிரேக்க போலீசார் தெரிவித்தனர். ஒரு கிரேக்க நாளிதழுக்கு தெரியாத அழைப்பாளர் ஒருவரால் அமைச்சகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிரீஸ் அரசியல் வன்முறையின் வரலாற்றைக் கொண்டுள்ளது. சிறிய வெடிகுண்டு மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன, எவ்வாறாயினும், இந்த சம்பவத்தால் தாம் கவலையடைந்துள்ளதாக […]

உலகம்

மக்களை பாதுகாக்க எதுவும் செய்வோம் : ஈராக்கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

  • February 3, 2024
  • 0 Comments

ஈராக்கின் ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) குட்ஸ் படை மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கப் படைகள் ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் ஈரான் ஆதரவு போராளி நிலைகளை குறிவைத்தன. “ஈராக், பிராந்தியம் மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர […]