இலங்கை

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் சமூகத்தை சந்தித்த ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (பிப்ரவரி 09) காலை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினருடன் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) தகவலின்படி, இந்த சந்திப்பின் போது, நாட்டின் மீட்சி முயற்சிகள் மற்றும் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கான உத்திகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடினார். கலந்துரையாடல்கள் முழுவதும், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளில் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதற்கு புலம்பெயர்ந்தோர் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். மேலும், ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல […]

ஐரோப்பா

100 கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா- உக்ரைன் : மத்தியஸ்தம் செய்வதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெற்றி

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றத்தை மத்தியஸ்தம் செய்வதில் வெற்றி பெற்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து ரஷ்யாவும் உக்ரைனும் தலா 100 போர்க் கைதிகளை (POWs) பரிமாறிக்கொண்டன. மேலும் உக்ரைனின் Volodymyr Zelenskiy கைதிகள் பரிமாற்றத்தை எளிதாக்குவதில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை, 3,135 உக்ரேனிய போர்க் கைதிகள் ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று வியாழன் இரவு சமூக ஊடகங்களில் Zelenskyy தெரிவித்தார். இது மாஸ்கோவிற்கும் கீவ்விற்கும் இடையில் […]

பொழுதுபோக்கு

சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் தமன்னா.. கூடவே யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா?

  • February 9, 2024
  • 0 Comments

நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன்,நடிகை ரம்பா,நடன இயக்குனர் கலா மாஸ்டர்,நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா […]

ஆசியா

காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைக்கு வரவில்லை என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் கமிஷனர் ஜெனரல் பிலிப் லாஸ்ஸரினி தெரிவித்துள்ளார் “ஒவ்வொரு நாளும் போரின் தழும்புகளை ஆழமாக்குகிறது, இழந்த தலைமுறை சுரண்டலுக்கு ஆளாக நேரிடும், குழந்தைகளின் குழந்தைப் பருவம் திருடப்படுகின்றன மற்றும் அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார். காசாவில் நான்கு மாதங்கள் நடந்த “கொடூரமான” போரின் எண்ணிக்கை “துயர்கரமானது” என்றும் தெரிவித்துளளார்

பொழுதுபோக்கு

“தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்” முதல் முறையாக நடந்த கூட்டத்தில் அறிவிப்பு

  • February 9, 2024
  • 0 Comments

அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜயை, 2026-ல் தமிழகத்தின் முதல்வராகியே தீர வேண்டும் என புஸ்ஸி ஆனந்து கட்சி தொண்டர்கள் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னனாகவும், 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாகவும் இருக்கும் விஜய், கடந்த சில வருடங்களாக அரசியல் பற்றி பேசி வந்தாலும், திடீர் என தன்னுடைய கேரியரை விட்டு வெளியேறி, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது யாரும் […]

பொழுதுபோக்கு

தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பவன் கல்யாணின் ரசிகர்கள்!

  • February 9, 2024
  • 0 Comments

ஆந்திராவில் இன்று நடிகர் பவன் கல்யாணின் படம் ரீரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் தியேட்டருக்குள் தீ வைத்து கொளுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் ஹிட்டான பழைய கிளாஸிக் படங்களை மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யும் கலாச்சாராம் தற்போது அதிகமாகி வருகிறது. இதற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்புக் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களும் ரீ- ரிலீஸாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் ஆந்திராவில் நடிகர் […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் ரெயிலை கடத்திய மர்ம நபர்: பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பயணிகள்

  • February 9, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார்.அந்த மர்ம நபர் பயணிகள் மற்றும் கண்டக்டரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரெயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரெயிலின் கண்டக்டர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் முதலில் வாட்ஸ்அப் மூலம் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த […]

பொழுதுபோக்கு

Lal Salaam: தியேட்டரில் மொய்க்காத கூட்டம்.. முதல் நாளே இப்படியா?

  • February 9, 2024
  • 0 Comments

ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் ரஜினிகாந்தை தான் முன்னிலைப்படுத்தி ஆடியோ லாஞ்ச் முதல் அனைத்து புரமோஷன்களும் நடைபெற்றன. ஆனால், இன்று வெளியாகி உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாதாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு முதல் நாள் மட்டுமின்றி ஒரு வாரத்துக்கு டிக்கெட் புக்கிங் […]

ஆசியா

பாக். நாடாளுமன்றத் தேர்தல்; இம்ரான்கான் நிறுத்திய சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலை!

  • February 9, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை எந்த இடையூறுமின்றி நடைபெற்றது.இத்தேர்தலில் நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் 12.85 கோடி பேர் வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து […]

இலங்கை

குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

  • February 9, 2024
  • 0 Comments

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகநபரான கணவர், மனைவியின் ஆடைகளை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த 33 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]