ஆசியா

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்.. தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்த கிம் ஜாங் உன்

  • February 9, 2024
  • 0 Comments

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் ஆயுத பலத்தை அதிகரித்து அச்சுறுத்துவதாலும், பதில் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்துவதாலும் கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடனான அனைத்து பொருளாதார ஒத்துழைப்பையும் முறித்துக்கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது. சமீபத்தில் ராணுவ வீரர்களிடையே கிம் ஜாங் உன் பேசும்போது போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்தார் இந்த பரபரப்பான […]

ஐரோப்பா

விளாடிமிர் புடினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாரியுபோல் மீதான தாக்குதலுக்கு போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நகரத்தின் மீதான ரஷ்யாவின் முற்றுகையானது, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல், மற்றும் பொதுமக்களின் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீண்டும் மீண்டும் குறிவைத்து அழித்ததை உள்ளடக்கியது என்று சர்வதேச கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டபப்ட்டுள்ளது. மேலும் மோதலின் நேரடி விளைவாக சுமார் 8,000 பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ளது,

உலகம்

பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன உலகின் 4வது பெரிய கடல் – அதிர்ச்சி தகவல்!

  • February 9, 2024
  • 0 Comments

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ‘ஆரல்’ எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4வது பெரிய கடல். 1960ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது 2010ல் பெரும்பாலும் வறண்டது. ‘ஆரல்’ கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக […]

உலகம்

இங்கிலாந்து முழுவதும் பனி மற்றும் வெள்ளம் எச்சரிக்கை

இங்கிலாந்து முழுவதும் பனி மற்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வரை ஸ்காட்லாந்தின் பெரும்பகுதிக்கு நடைமுறையில் உள்ளன, மின்வெட்டு மற்றும் பயண இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு இங்கிலாந்து முழுவதும் 60 க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

மொனராகலை – ஒக்கம்பிடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். குறித்த உத்தியோகத்தர் துப்பாக்கியை பராமரிக்கும் செயற்பாட்டில் இன்று, முற்பகல் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கி இயங்கியுள்ளது. இதன்போது, அருகில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

அதிகாரிகளின் தெருக்கடி காரணமாக ஆசிட் குடித்து அரசு ஊழியர் தற்கொலை…!

  • February 9, 2024
  • 0 Comments

ராய்ச்சூரில் அதிகாரிகளின் நெருக்கடியால் நிலப்பதிவேடு அலுவலக ஊழியர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.சி அலுவலகத்தில் நிலப்பதிவேடு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியவர் வாசிம் சவுத்ரி(36). இவர் ரெய்ச்சூரில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியம் அருகே உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்தார். இதனால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]

ஆசியா

காசாவில் பட்டினியில் தவிக்கும் மக்கள்: புற்களை சாப்பிடும் சோகம்

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ”காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இப்போது பசியுடன் உள்ளனர், மேலும் மக்கள் தங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் பாதுகாப்பற்ற தண்ணீரைக் கொண்டுள்ளனர்” என்று ஆக்ஷன் எய்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரஃபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது ” பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துளளது. ஆக்‌ஷன் எய்ட் பாலஸ்தீனத்தின் சட்டத்தரணி […]

பொழுதுபோக்கு

விக்ரம் – 62இல் இணைந்த சூப்பர் ஹிட் நடிகர்.. யாருனு தெரிஞ்சிக்கனுமா?

  • February 9, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் […]

உலகம்

ரஷ்யா நேட்டோ நாட்டை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தாக்கக்கூடும்: டென்மார்க் எச்சரிக்கை

ரஷ்யா எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டும் ஆயுதம் ஏந்துகிறது என்றும், அது நேட்டோ நாட்டை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தாக்கக்கூடும் என்றும் டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். “ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யாவின் திறன் மிகவும் அதிகரித்துள்ளது,” என்று பாதுகாப்பு மந்திரி ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் கூறியுள்ளார். “மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள், ரஷ்யா 5வது பிரிவு மற்றும் நேட்டோவின் ஒற்றுமையை சோதிக்கும் என்பதை நிராகரிக்க முடியாது. அது 2023 இல் நேட்டோவின் மதிப்பீடு […]

இலங்கை

232 பேக்கரி மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) 232 பேக்கரி மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக விதிமுறைகளை மீறி எடை குறைந்த பாண்களை விற்பனை செய்ததற்காகவும், விலைகளை காட்சிப்படுத்தாமல் புறக்கணித்ததற்காகவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை பிப்ரவரி 2 அன்று வர்த்தமானி வெளியிடப்பட்டது, இது பாண் தயாரிப்புகளுக்கான நிலையான எடைகளை கோடிட்டுக் காட்டுகிறது. வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஒழுங்குமுறைகளை மீறும் விற்பனையாளர்களை அடையாளம் காண நாடு முழுவதும் விரிவான சோதனைகளைத் தொடங்கியது. நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் […]