இலங்கை

இலங்கை : ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் படுகாயம்!

  • February 18, 2024
  • 0 Comments

ஸ்ரீபாத யாத்திரைக்கு வந்தவர்கள் பயணித்த வேனும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18.02) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குனிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேன […]

இந்தியா

இந்தியாவில் பெண் ஒருவரின் தலையுடன் வீதியில் நடமாடிய நபரால் பரபரப்பு!

  • February 18, 2024
  • 0 Comments

இந்தியாவில் பெண் ஒருவரின் தலையை துண்டித்து தூக்கி செல்லும் காணொளி வைரலாக பரவி  வருகிறது. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வசிக்கும் அனில் குமார் என்ற 30 வயது நபர் தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதையடுத்து சந்தேகநபரின் கணவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என உள்ளூர் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பின்னர், மனைவியின் தலை […]

உலகம்

காலராவால் பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா – 3.5 டன் எலையிலான நிவாரண உதவிகளை அனுப்பி வைத்த இந்தியா

  • February 18, 2024
  • 0 Comments

காலரா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஜாம்பியா நாட்டிற்கு, இந்தியா சார்பில் 3.5 டன் எடையிலான நிவாரண உதவிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியாவில் கடந்த சில மாதங்களாக காலரா நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சுத்தமான குடிநீர் கிடைக்காததும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததாலும், காலரா நோய் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குடிப்பதற்கு மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு பொதுமக்கள் தற்போது சுத்திகரிக்கப்படாத அசுத்தமான நீரையே […]

ஐரோப்பா

நவல்னி மரணம் தொடர்பில் சம்மன் அனுப்பியுள்ள பிரித்தானியா

  • February 18, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் தொடர்பில் பிரித்தானிய சம்மன் அனுப்பியுள்ளது. 2020ஆம் ஆண்டில் அலெக்ஸி நவல்னி விமானப் பயணத்தின்போது விஷ அமிலம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து ஜேர்மனியில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், 2021ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்குள் நுழைந்தார். ஆர்டிக் சிறையில் அடைக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக ரஷ்யா கூறியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி விளாடிமிர் […]

ஆசியா

காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் கூட இறக்கும் அபாயம்: இனி நாசர் மருத்துவமனை முற்றிலும் இயங்காது

நாசர் மருத்துவமனையில் குறைந்தது 120 நோயாளிகள் மற்றும் ஐந்து மருத்துவக் குழுக்கள் தண்ணீர், உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் சிக்கித் தவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டன, இது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆறு நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காசா பகுதியின் இரண்டாவது பெரிய மருத்துவமனை “முற்றிலும் சேவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது” என்று காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் […]

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • February 18, 2024
  • 0 Comments

மெல்பேர்னில் இருந்து அடிலெய்டு செல்லும் விமானத்தில் குழந்தையொன்றுக்கு தட்டமை ஏற்பட்டதை தொடர்ந்து அவுஸ்ரேலியா முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கிளேர் லுக்கர் கூறுகையில், “குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் பட்டியலிடப்பட்ட வெளிப்பாடு தளத்தில் கலந்துகொண்ட எவரும் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மற்றும் அறிகுறிகள் தோன்றினால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முகமூடியை அணிந்துகொண்டு, மற்றவர்களிடமிருந்து நீங்கள் தனிமைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் மரக்கட்டையில் மோதி உந்துருளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

  • February 18, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்து வருபவர் நேற்று மாலை கள்ளினை இறக்கி தவறணைக்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த உந்துருளி மோதி விபத்தினை […]

ஐரோப்பா

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணையும் : இத்தாலி வெளியுறவு அமைச்சர்

போர் முடிவடைந்தவுடன் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணையும் என்று இத்தாலி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டிருக்கும் போது அது இராணுவ கூட்டணியில் நுழைய முடியாது என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தெரிவித்தார். மேலும் ரஷ்யாவிற்கான செய்தி மிகவும் தெளிவாக உள்ளது . உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராக இருக்க நாங்கள் வேலை செய்கிறோம்” என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் தஜானி கூறியுள்ளார். “நாம் […]

பொழுதுபோக்கு

இரும்புக்கை மாயாவி எப்போது உருவாகும்? – மனம் திறந்த லோகேஷ்

  • February 18, 2024
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு, தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்கவுள்ளார். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மாநகரம்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தனது முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலை தொடர்ச்சியாக பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது. தனித்துவமான கதைய […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நெடுஞ்சாலையில் விபத்து : இரு சிறுமிகள் பலி!

  • February 18, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வீட்பெல்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏழு வயது சிறுமிகள் இருவர்   பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சிறுமிகள்  பயணித்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு பிரிவின் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில், அவர்களை மீட்டுள்ளனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற 31 வயது பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் மெரிடின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.