இலங்கை செய்தி

22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை

22 ஐ ஆயுதமாக்கி மக்களை பழிவாங்காதீர்: ஆளுங்கட்சி கோரிக்கை

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, “22-ஆவது திருத்தத்திற்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் என்ன நேரும்?” என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது:

“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலத்திற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு உள்ளது.

அரசியல் கட்சிகள் 22-ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதால் பொதுமக்களுக்கு நேரடிப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சட்டத்தரணிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டாலும்கூட அது வழக்கு விசாரணைகளில் மட்டுமே தாமதத்தை உண்டாக்கும்.

ஆனால், 22-ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் அது நேரடியாகப் பொதுமக்களைப் கடுமையாகப் பாதிக்கும். எனவே, அத்தகையதொரு முடிவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை