கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பருடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த தனது வர்த்தக நண்பரின் பையில் வைத்திருந்த 50 லட்சம் ரூபா பணத்துடன் மற்ற நண்பர் தப்பிச் சென்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்ற முறைப்பாட்டாளரான வர்த்தகரும் அவரது நண்பரும் பாடசாலையில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்களாகும். வாகனம் ஒன்றை வாங்க வந்த இருவரும் ஹோட்டல் அறையில் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வர்த்தக நண்பர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தூங்கியதையடுத்து […]













