இலங்கை செய்தி

அம்பானியின் மகனின் திருமணத்தில் இலங்கை சமையல் கலைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

  • March 7, 2024
  • 0 Comments

உலக அளவில் பரபரப்பான பேச்சை உருவாக்கிய இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனத் அம்பானியின் திருமண விழாவிற்கு சமையல் செய்ய இலங்கையில் இருந்து 13 சமையல் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் சமையல் கலைஞர்கள் குழுவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் குழுவை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த உணவகத்தில் இலங்கை சமையற்காரர்கள் […]

பொழுதுபோக்கு

லால் சலாம் தோல்விக்கு அப்பா தான் காரணம்.. ரஜினியின் தலையை உருட்டிய ஐஸ்வர்யா

  • March 7, 2024
  • 0 Comments

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து லால் சலாம் என்ற படத்தை எடுத்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினி மொய்தீன் பாயாக கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் மோசமான விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் இப்போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை கேமியோ தோற்றத்தில் வைக்க தான் […]

ஐரோப்பா செய்தி

செக் விவசாயிகள் அரசாங்க அலுவலகத்தின் முன் போராட்டம்

செக் விவசாயிகள் அரசாங்க அலுவலகத்தின் முன் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் ப்ராக் தெருக்களை டிராக்டர்கள் மூலம் தடுத்து நிறுத்தி, நாட்டின் விவசாய அமைச்சரை கேலி செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு தலைமை அலுவலகம் முன்பு விவசாயிகள் உரத்தை கொட்டியதால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு வீதிகளில் இறங்கி, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க பசுமை ஒப்பந்தத் திட்டத்தின் மூலம் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அகற்றவும், உக்ரைனில் இருந்து பண்ணை […]

செய்தி தமிழ்நாடு

புதுச்சேரி சிறுமி துஷ்பிரயோகம் மற்றும் படுகொலை – இருவர் கைது

  • March 7, 2024
  • 0 Comments

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர். […]

உலகம் செய்தி

2023 புலம்பெயர்ந்தோருக்கு மிகக் கொடிய ஆண்டாகும் – ஐ.நா

  • March 7, 2024
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 8,565 பேர் இடம்பெயர்வு பாதைகளில் இறந்தனர், இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு பதிவுகள் தொடங்கியதிலிருந்து இது மிகவும் ஆபத்தான ஆண்டாக அமைந்தது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. “2023 இறப்பு எண்ணிக்கை 2022 உடன் ஒப்பிடும்போது 20 சதவிகிதம் சோகமான அதிகரிப்பைக் குறிக்கிறது, மேலும் உயிர் இழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது” என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016 […]

விளையாட்டு

முக்கிய தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல்

  • March 7, 2024
  • 0 Comments

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏறக்குறைய 1 ஆண்டுக்கு பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். ஆனால் அந்த தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார். அந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால் அவர் இந்தியன் […]

இந்தியா

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை: திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூட நடவடிக்கை எடுக்கப்படலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, ” தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை ஆனால் யாரோ சிலர் […]

ஐரோப்பா

நேட்டோவின் இராணுவப் பயிற்சி தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை

நேட்டோவின் சமீபத்திய இராணுவப் பயிற்சி ரஷ்யாவுடனான ஆயுத மோதலுக்கான ஒத்திகை போல் இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார். நேட்டோவின் நோர்டிக் ரெஸ்பான்ஸ் பயிற்சியானது வடக்கு நோர்வே , ஸ்வீடன் மற்றும் பின்லாந்து முழுவதும் நடைபெறுகிறது மற்றும் 13 நாடுகளைச் சேர்ந்த 20,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். மார்ச் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்தப் பயிற்சி, ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதாகவும், பதட்டங்களை உயர்த்துவதாகவும் பட்ருஷேவ் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு குண்டு வெடிப்பு சம்பவம்!

  • March 7, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இன்று (07) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவ தினமான இன்று பகல் காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் […]

வட அமெரிக்கா

மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்; இரு பெண்கள் உயிரிழப்பு!

  • March 7, 2024
  • 0 Comments

மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் இளைஞனொருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாதலாஹாரா நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் புதன்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 வயதான ஓர் இளைஞனே தாக்குதல் நடத்தியதாகவும், இளைஞனும் சம்பவத்தில காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை என ஜாலிஸ்கோ மாநில வழக்குத்தொடுநர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.