உலகம்

இந்தோனேசியாவில் உணவு நஞ்சாதல் – 777 மாணவர்கள் பாதிப்பு

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்களாக 777 பேருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.

இதன் மூலம், இந்தத் திட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று நாட்களில் 1,700-ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய உணவு நஞ்சூட்டல் காரணமாக 950 இந்தோனேசியர்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ Prabowo Subianto  கடந்த ஆண்டு பல பில்லியன் டொலர் மதிப்பில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அதிக செலவு பிடிக்கும் இந்தத் திட்டம் ஊழல் குற்றச்சாட்டுகள், தலைமை மாற்றங்கள் மற்றும் மாணவர்கள் சுகவீனம் அடைதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்