ஆசியா செய்தி

பாகிஸ்தானின் 14வது அதிபராக பதவியேற்ற ஆசிப் அலி சர்தாரி

  • March 10, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி இன்று பதவியேற்றார். ஆட்சிக்கவிழ்ப்பு வாய்ப்புள்ள நாட்டின் ஒரே சிவிலியன் அதிபராக அவர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா, ஜனாதிபதி மாளிகையான அய்வான்-இ-சத்ரில் நடந்த சிறிய மற்றும் முறையான விழாவில் 68 வயதான திரு சர்தாரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். செப்டம்பர் 2023 இல் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்த பிறகு ஐந்து மாதங்கள் பதவியில் இருந்த டாக்டர் ஆரிஃப் அல்விக்குப் […]

இலங்கை

அஸ்வெசும நலன்புரி திட்டம்: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையவழி அல்லது பிரதேச செயலாளர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

விளையாட்டு

IPL Update – பயிற்சியை தொடங்கிய தல

  • March 10, 2024
  • 0 Comments

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த […]

இலங்கை

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையினால் இன்றைய தினம் (10.03.2024) மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முள்ளியவளையை சேர்ந்த கனடா நாட்டின் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி கடந்த 2022 ம் ஆண்டு கனடா நாட்டில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியான விஜயாலயன் அவர்களின் நினைவாக அவர்களுடைய உறவுகளால் விஜயாலயன் அறக்கட்டளை எனும் பெயரிலே அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் […]

இலங்கை

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள்

  • March 10, 2024
  • 0 Comments

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். திருமதி சுசித்ரா எல்ல கோவிட் காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து,600 பில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை […]

ஆசியா

ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள் தீவிர தாக்குதல்

இஸ்ரேலியப் படைகள் காசா பகுதி முழுவதும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. நுசிராத் அகதிகள் முகாமில் குறைந்தது 13 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது மற்றும் ரஃபாவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீதும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு காசாவில், ஒரு குழந்தை மற்றும் ஒரு இளம் பெண் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தனர். இந்நிலையில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை 25 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை

பொலிஸாரின் அடாவடித் தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

  • March 10, 2024
  • 0 Comments

வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணால்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்,மதத்தலைவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் […]

பொழுதுபோக்கு

முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத் – என்ன இப்படி இறங்கிட்டாரே…

  • March 10, 2024
  • 0 Comments

நடிகர் பரத் தன்னுடைய முதல் படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றவர். தொடர்ந்து காதல், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் முடங்கினார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத நிலையில் சமீபத்தில் வாணி போஜனுடன் இணைந்து நடித்த லவ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் அவரது மகன் மற்றும் புதுமுகங்கள் நடித்து வரும் […]

இலங்கை

இலங்கை : 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுகள் மீட்பு

கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுகள் இன்று அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் பேரில் விசேட அதிரடிப்படையினர் அம்பாறை பஸ் நிலையத்தில் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களை சோதனையிட்ட போது, ​​இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 115 அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் கூற்றுப்படி, 115 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளில் 1,150 பாக்கெட்டுகள் இருந்தன, சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த […]

ஐரோப்பா

அலெக்ஸி நவல்னி மரணம் : புட்டினின் ரகசிய திட்டம் அம்பலம்

மறைந்த எதிர்க்கட்சி ஆர்வலர் அலெக்ஸி நவல்னி ஆர்க்டிக் சிறையில் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரை மேற்கில் உள்ள ரஷ்யர்கள் சிறையில் மாற்றுவது குறித்து விவாதிக்க கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச்சை ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்தித்தார் என investigative outlet Agentstvo தெரிவித்துள்ளது . Agentstvo இன் இரண்டு ஆதாரங்களின்படி, புடினும் அப்ரமோவிச்சும் பிப்ரவரி 16 அன்று நவல்னியை உள்ளடக்கிய திட்டமிடப்பட்ட கைதிகளை மாற்றுவதற்கான விவரங்களைப் பற்றி விவாதித்துள்ளனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு […]