துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீவிபத்து : பலர் உயிரிழப்பு!
துருக்கியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் தொண்டு நிறுவனமான World Central Kitchen குழு உறுப்பினர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உயிரிழந்த ஏழு பேரும் ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா மற்றும் பாலஸ்தீனத்தின் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்று உணவு தொண்டு நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் நேற்று காசாவில் கொல்லப்பட்ட ஏழு மனிதாபிமான உதவிப் பணியாளர்களில் மூவர் இங்கிலாந்து குடிமக்கள் என்பதை World Central […]
பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் ‘புஷ்பா 2’. இப்படத்தின் முதல் பாகம் கடந்து 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இப்படம் பெற்று தந்தது. சுமார் 500 கோடி வசூல் சாதனை செய்த ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தை தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் நடித்து முடித்துள்ளார் அல்லு அர்ஜுன். செம்மர கடத்தலை மையமாக வைத்து […]
சதொச விற்பனை நிலையங்களில் இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பையை 3,420 ரூபா சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் தனக்கு வழங்கப்பட்டதாக சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார். மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை […]
இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை எரியூட்டிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இன்றைய தினம் (02.04) இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடு புடவைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு […]
காங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் ஷிசெகெடி திங்களன்று நாட்டின் முதல் பெண் பிரதமரை நியமித்துள்ளார். ருவாண்டாவின் எல்லையை ஒட்டிய நாட்டின் கனிம வளம் மிக்க கிழக்கில் வன்முறை மோசமடையும் நேரத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. நியமனத்தை தொடர்ந்து பிரதமர் ஆற்றிய உரையில் அமைதி மற்றும் வளர்ச்சியை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்தார். கிழக்கு காங்கோ நீண்ட காலமாக 120 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்களால் கைப்பற்றப்பட்டது, 07 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், கென்டக்கி மற்றும் மொன்டானா ஆகிய மூன்று அமெரிக்க மாநிலங்களில் உள்ள பாலூட்டிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளை USDA உறுதிப்படுத்திய நிலையில், இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. நோயாளியின் முதன்மை அறிகுறி இளஞ்சிவப்பு கண் அதாவது கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அமெரிக்காவில் பால் பொருட்கள் தொடர்பாக எந்த பாதுகாப்பு […]
இந்தியில் மார்ச் 8ந் தேதி வெளியான திரைப்படம் ஷைத்தான். இப்படத்தில், அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்து, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து, ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி […]
அல்பேனியாவின் தலைநகர் திரனாவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஜோசா ஆற்றுப்பாலத்தில் இன்று அதிகாலையில் சென்றுகொண்டிருந் ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில், காரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 7 பேர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், ஒருவர் உள்ளூர் டிரைவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து பிற நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்வோருக்கு அல்பேனியா பிரதான பாதை இல்லை. […]
பின்லாந்தில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தப்பியோடிய தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹெல்சின்கியின் புறநகர்ப் பகுதியான வான்டாவில் உள்ள வியர்டோலா பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் 12வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்க, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெருங்கிய உறவினருக்கு சொந்தமான உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை வைத்திருந்த அவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.