இந்தியா

சூடுப்பிடிக்கும் கச்சதீவு விவகாரம்! இந்தியாவுடன் பேச்சு வார்த்தை தேவையில்லை: இலங்கை அதிரடி

கச்சதீவு விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கப்பட்ட ஒரு விடயம் என்பதால் அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கச்சதீவு விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் ஆட்சியின் போது, இலங்கைக்கு இந்தியா, கச்சதீவினை தாரைவார்த்திருந்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக […]

பொழுதுபோக்கு

நம்ம சிம்ரன் இத்தன பேர “லவ்” பண்ணி இருக்காங்களா? உங்களுக்கு தெரியுமா?

  • April 4, 2024
  • 0 Comments

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் பட்டையை கிளப்பிவிடுவார். ஹிப் மூவ்மென்டில் இவரை அடிப்பதற்கு இன்றுவரை ஆட்கள் இல்லை என்றே கூறலாம். சினிமாவைத் தாண்டி சிம்ரன் நிறைய சர்ச்சைகள், கிசுகிசுப்பில் சிக்கி இருக்கிறார். சிம்ரன் முதல் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாராம். இவர்கள் இருவரும் விஐபி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் போது பல கிசுகிசுக்கள் வெளியானது. ஒரு கட்டத்தில் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் […]

ஐரோப்பா

“நேரடி மோதலில்” ரஷ்யாவும் நேட்டோவும் : மேற்குநாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்யாவும் நேட்டோவும் இப்போது “நேரடி மோதலில்” உள்ளன கிரெம்ளின் எச்சரித்துள்ளது. நேட்டோவின் தொடர்ச்சியான கிழக்கு விரிவாக்க அலைகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் போருக்குச் சென்ற ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் கூட்டணி வருவதைத் தடுக்கும் குறிக்கோளுடன் குறிப்பிட்டுள்ளார் மாறாக, போர் நேட்டோவை ஊக்கப்படுத்தியுள்ளது, இது பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நுழைவுடன் மீண்டும் விரிவடைந்துள்ளது.என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். நேட்டோ “ஏற்கனவே உக்ரைனைச் சுற்றியுள்ள மோதலில் ஈடுபட்டுள்ளது (மற்றும்) நமது […]

இலங்கை

ஹேக் செய்யப்பட்ட இலங்கை கல்வி அமைச்சின் இணையத்தளம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. “அநாமதேய EEE” என்ற பெயரால் ஊடுருவிய மர்ம் நபர், கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் “என் பெயர் அநாமதேய EEE மற்றும் நான் தற்போது A/l படித்து வருகிறேன். உங்கள் இணையத்தளத்தை அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிக்கவும் ஆனால் உங்கள் இணையத்தளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஒரு இலங்கை பிரஜை என்ற […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொது சேவைகளை தடையின்றி பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, இந்த முயற்சியானது பண்டிகைக் காலத்தில் எந்தவித இடையூறுகளும் இன்றி அத்தியாவசிய சேவைகளை சுமூகமாக நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கம் கொண்டது. மேலும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகள் போன்ற அத்தியாவசிய […]

இந்தியா

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை… 20 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

  • April 4, 2024
  • 0 Comments

கர்நாடகாவில் 16 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டு வயது குழந்தை 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கர்நாடக மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சந்திரப்பா என்பவர் நிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. சுமார் 16 அடி ஆழத்திற்கு தோண்டிய […]

இலங்கை

தனிப்பட்ட தகராறின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை!

  • April 4, 2024
  • 0 Comments

காலி தங்கெதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய தங்கெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி, தங்கேதர டிடிஸ் வத்த பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

இந்தியா

இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை வெற்றி!

  • April 4, 2024
  • 0 Comments

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான […]

தென் அமெரிக்கா

சொத்துக்குவிப்பு வழக்கு: பெருவின் அதிபர்டினா பொலுவார்டேவிடம் விசாரணை

  • April 4, 2024
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த 2022ம் ஆண்டு முதல் பெண் அதிபராக டினா பொலுவார்டே பதவியேற்றார். இந்தநிலையில் அவர் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஆடம்பர கைகடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றை வாங்கி குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிபர் மாளிகை மற்றும் டினா பொலுவார்டே வீடுகளில் பொலிஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத பலகோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள்,சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் பொலிஸார் இதுகுறித்து […]

ஐரோப்பா

உக்ரைனில் எழுப்பப்படும் தற்காப்புக் கோட்டை: ரஷ்யாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி

ரஷ்யாவின் துருப்புக்கள் தங்கள் முழு அளவிலான படையெடுப்பிற்கு இன்னும் 26 மாதங்கள் முன்னேறுவதைத் தடுக்க தற்காப்புக் கோட்டைகளை உருவாக்க உக்ரைன் 24 மணிநேரமும் உழைத்து வருகிறது. உக்ரேனிய அரசாங்கம் இந்த ஆண்டு $509 மில்லியனை ரஷ்யாவுடனான அதன் எல்லையையும் அதன் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள ரஷ்யப் படைகளுடன் முன் வரிசையையும் பலப்படுத்துவதற்கு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி Denys Shmhyal மேலும் 142 மில்லியன் டாலர் தருவதாக உறுதியளித்துள்ளார். தலைநகர் கீவின் வடக்கே செர்னிஹிவ் பகுதியில், […]