இலங்கை

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் கைது!

  • April 4, 2024
  • 0 Comments

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து   ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த 25வயதுடைய நபர் மற்றும் வவுனியாவை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் […]

உலகம்

எல் சால்வடார் சிறைகளில் வன்முறையால் 241 பேர் உயிரிழப்பு!

  • April 4, 2024
  • 0 Comments

எல் சால்வடார் சிறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி நயீப் புகேலின் “கும்பல் மீதான போர்” தொடங்கியதில் இருந்து குறைந்தது 241 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. உரிமைகள் அமைப்பின் இயக்குனர் இங்க்ரிட் எஸ்கோபார், மாநில காவலில் இறந்தவர்கள் பற்றிய 500 அறிக்கைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டில் மாத்திரம் 126 இறப்புகள் பதிவாகியதாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2022 இல், புகேல் மத்திய அமெரிக்க நாட்டைப் பயமுறுத்திய கும்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கான பல அரசியலமைப்பு […]

வட அமெரிக்கா

ஒன்ராறியோவில் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் மீட்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

  • April 4, 2024
  • 0 Comments

கனடாவின் Montreal துறைமுகத்தில் 390 கப்பல் கொள்கலன்களை சோதனை செய்த போது கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. மான்ட்ரியல் துறைமுகத்தில் 390 கப்பல் கொள்கலன்களை சோதனை செய்த போது கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கனேடிய அதிகாரிகள் புதன்கிழமை தடுத்ததாக தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட 598 வாகனங்களில் பொரும்பான்னையானவைகள் 34.5 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலானவயாகும். அவை அண்டை மாகாணமான ஒன்டாரியோவில் திருடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் கனடா எல்லைச் […]

செய்தி

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்க வேண்டாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • April 4, 2024
  • 0 Comments

நாம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், ஏற்படும் ஆபத்து தொடர்பாக ‘proceedings of the National Academy of Sciences ‘ என்ற அறிவியல் இதழில் முக்கிய ஆய்வின் தகவல் வெளியாகி உள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 105 மைக்ரோ நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது முன்பு வெளியான அளவை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில் எல்லா லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைத்தால், 100,000 நானோ பிளாஸ்டிக் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கடுமையான வறட்சி?

  • April 4, 2024
  • 0 Comments

20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கடுமையான வறட்சியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் கடுமையான வறட்சி கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவை பாதித்துள்ளது மற்றும் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த வறட்சி நிலைமைகள் மிகவும் கடுமையானதாகவும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் எனவும் கூறப்படுகின்றது. வறட்சிக்கு முன், பாதிப்புகளை குறைக்க, திட்டங்களை தயாரிக்க, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தேசிய […]

இலங்கை

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் இடம்பெயர்வு!

  • April 4, 2024
  • 0 Comments

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் கிட்டத்தட்ட 75,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர். பெரும்பாலான இலங்கையர்கள் வேலை நிமித்தம் குவைத்துக்குச் சென்றுள்ளனர் மற்றும் அவர்களின் எண்ணிக்கை 17,793 ஆகும். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்த வருடத்தின் முதல் […]

ஆசியா செய்தி

தைவான் உலுக்கிய நிலநடுக்கம் – மீட்புப் பணிகள் தீவிரம் – இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்கள்

  • April 4, 2024
  • 0 Comments

தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் சுமார் 9 பேர் மாண்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 25 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அது என்று தைவானின் நிலநடுக்கக் கண்காணிப்பு அமைப்பு சொன்னது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வில்லியன் லாய் (William Lai) நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு இரவுமுழுதும் பணிபுரிந்துகொண்டிருக்கும் மீட்புக் குழுவை […]

உலகம்

ஆர்ஜென்டினாவில் அரசு வேலைகளை இழந்த 15000 பேர்!

  • April 4, 2024
  • 0 Comments

அர்ஜென்டினாவில் ஜனாதிபதி ஜேவியர் மிலியின் செலவினங்களைக் குறைக்கும் ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 15,000 அரசு வேலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுதந்திரவாத அரசாங்கத்தை கோபமான எதிர்ப்பாளர்கள் மற்றும் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களுடன் மோத வைக்கும் வலிமிகுந்த பொருளாதார நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும். ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி ஒரு செய்தி மாநாட்டில் இது தொடர்பான விவரங்களை அறிவித்தார். “இது மாநில செலவினங்களைக் குறைக்க நாங்கள் செய்யும் வேலையின் ஒரு பகுதியாகும்,” என்று அவர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

90 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கியது YouTube!

  • April 4, 2024
  • 0 Comments

பார்க்கத் தகுதியற்றவை என்று கருதப்படும் 90 லட்சம் வீடியோக்களை கடந்த மூன்று மாதங்களில் யூடியூப்பில் இருந்து நீக்கி உள்ளது அந்நிறுவனம். உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர்கள் யூடியூப் தளத்தில் தங்களது வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்த வீடியோக்களில் ரசிக்கத்தக்கவை பல இருந்தாலும் அருவருக்கதக்கவைகளும் ஏராளமானவை உள்ளன. அதனால் அத்தகைய வீடியோக்களை கண்டறிந்து நீக்கம் செய்வதை யூடியூப் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை அந்த நிறுவனம் நீக்கி வருகிறது. […]

உலகம்

மாரடைப்பு தொடர்பில் அமெரிக்க ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

  • April 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவினால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இலத்திரனியல் சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு இதயக் கோளாறுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி, இலத்திரனியல் சிகரெட் பாவனையாளர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.7 மில்லியன் ஆஸ்திரேலிய பெரியவர்கள் இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் வருடாந்த அமர்வுடன் இணைந்து இந்தத் தரவுகள் முன்வைக்கப்பட்டதுடன், இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்தும் 175,667 பேர் இதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆய்வில் […]