இந்தியா

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா! வேட்புமனுவில் வெளியான தகவல்

உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி […]

பொழுதுபோக்கு

மக்களே இவங்கள மறந்துடீங்களா? திரும்ப வந்துட்டாங்க….

  • May 4, 2024
  • 0 Comments

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்  கதாநாயகியாக அறிமுகமானார். மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான கண்ணே 722வது எபிசோடில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலுக்கு பின் நடிகை நிமேஷிகா மீண்டும் தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், விரைவில் சன் தொலைக்காட்சியில் புதிதாக அவள் ஒரு தேவதை எனும் சீரியல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை நிமேஷிகா தான் […]

ஆப்பிரிக்கா

ஐ.நாவின் வலியுறுத்தலுக்கு அமைய வரிகளை நீக்கியது சூடான்!

  • May 4, 2024
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் முறையீட்டைத் தொடர்ந்து, தெற்கு சூடான் சமீபத்தில் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்களை நீக்கியுள்ளது. நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்து வரும் உதவியை நம்பி உள்ளனர். பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிகளை நீக்குமாறு ஐ.நா அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக சாலை வழியாக அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் 60,000 பேருக்கு உணவு வழங்களில் சிக்கல் நிலவியதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

சீன ஜனாதிபதி ஐரோப்பாவுக்கு விஜயம்!

5 ஆண்டுகளுக்கு பிறகு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் ஐரோப்பாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் சீன ஜனாதிபதி குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி பிரான்ஸ், சேர்பியா மற்றும் ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல உளவு ஊழல்கள் மற்றும் உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யாவிற்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் […]

ஆசியா

நிலவின் இருண்ட பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய சீனா!

  • May 4, 2024
  • 0 Comments

கண்ணுக்கு தெரியாத நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் நிலவின் தொலைதூர பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரிக்க சீனா புதிய பணியை தொடங்கியுள்ளது. லாங் மார்ச்-5 ஒய்8 ராக்கெட் ஆளில்லா சாங் யி சிக்ஸை சுமந்து கொண்டு வெங்சான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. 53 நாள் பணியானது சந்திரனின் தொலைதூர பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ மாதிரிகளை பகுப்பாய்வுக்காக பூமிக்கு கொண்டு வரும். சந்திரன் எப்படி உருவானது என்பது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் என்று […]

ஆஸ்திரேலியா

பப்புவா நியூ கினியாவில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  • May 4, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் உள்ள பங்குனாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பங்குனாவின் மெற்கு- வட மேற்கு திசையில் 153 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது 170 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 5.64 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 154.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் […]

இலங்கை

இலங்கையின் முக்கிய சுற்றுலா இடமொன்றுக்கு வெளிநாட்டினருக்கு மாத்திரமே அனுமதி

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சபரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். நல்லதண்ணி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாதமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அங்கு இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் விசாகப் […]

இலங்கை

இலங்கையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ; ஒருவர் காயம்

  • May 4, 2024
  • 0 Comments

வாத்துவை – மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கு

வேட்டையனில் மீண்டும் சந்தித்த இரு பெரும் தலைவர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்

  • May 4, 2024
  • 0 Comments

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவர்கள் மீண்டும் படப்பிடிப்பு தலத்தில் இணைந்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட அமிதாப் பச்சன் “தல தி கிரேட் ரஜினியுடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமையும் பாக்கியமும் அடைகிறேன். மகத்துவம் என்றார். இதற்கு முன், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ‘ஹம்’, ‘அந்தா கானூன்’, ‘கெராப்தார்’ போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி […]

இந்தியா

கேரளா -5ஆவது மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை… தாய் உட்பட மூவர் கைது!

  • May 4, 2024
  • 0 Comments

பிறந்து சில நிமிடங்களை ஆன சிசுவை 5ஆவது மாடியில் இருந்து வீசி எறிந்து கொலை செய்த குழந்தையின் தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா அருகே பனம்பள்ளி வித்யா நகரில் துப்புரவு பணியாளர்கள் நேற்று குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் ஒரு பிளாஸ்டிக் கொரியர் கவர் கிடந்துள்ளது. அதனை எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் ஆண் சிசு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி […]