இந்தியா

கேரளா -5ஆவது மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை… தாய் உட்பட மூவர் கைது!

பிறந்து சில நிமிடங்களை ஆன சிசுவை 5ஆவது மாடியில் இருந்து வீசி எறிந்து கொலை செய்த குழந்தையின் தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா அருகே பனம்பள்ளி வித்யா நகரில் துப்புரவு பணியாளர்கள் நேற்று குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் ஒரு பிளாஸ்டிக் கொரியர் கவர் கிடந்துள்ளது. அதனை எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் ஆண் சிசு ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிசு வைக்கப்பட்டிருந்த கொரியர் கவரில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முகவரி இருந்தது. அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.

சாலையில் கிடக்கும் குழந்தை சடலம், மற்றும் அந்த  அடுக்குமாடி குடியிருப்பு

அதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிசுவை சாலையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தியபோது ஒரு வீட்டின் கழிவறையில் ரத்தக்கரை இருப்பதை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருப்பவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அவர்களின் விசாரணையில் அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும், பெண்ணின் பெற்றோர், தங்களது மகள் கர்ப்பமடைந்ததை வெளியே தெரியாமல் மறைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வைத்துக் கொள்ள விரும்பாத பெண்ணின் பெற்றோர், சிசுவை கொரியர் கவரில் வைத்து 5ஆவது மாடியில் இருந்து கீழே வீசி எரிந்துள்ளனர். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதைத்தொடர்ந்து இளம்பெண், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content