இந்தியா

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா! வேட்புமனுவில் வெளியான தகவல்

உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவலின் படி அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய், அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய், கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது, வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன, 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது, 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது, 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன, 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது அத்துடன் தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சொந்த வாகனம் கிடையாது, அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது நியமனப் பத்திரங்களின்படி, ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார். புளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் இளங்கலை கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.

மார்ச் 2023 இல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் “மோடி சமாஜ் என்று அழைக்கப்படும் அவதூறு அறிக்கைக்காக” இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500 இன் கீழ் அவர் குற்றவாளி என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்,

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. குஜராத்தின் சூரத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது, அது நிலுவையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரமாணப் பத்திரத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் ஆகஸ்ட் 4, 2023 அன்று உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் பிரமாணப் பத்திரத்தில் அவர் மீது வேறு எந்த கிரிமினல் வழக்கையும் குறிப்பிடவில்லை.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content