உலகம்

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல ஒப்புதல்!

  • May 14, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 30 கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவமயமாக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்  எதிர்ப்பு தெரிவித்ததை வரவேற்கும் முகமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது. ஆனால், இந்நீர்வழி வழியாகச் செல்லும்போது அவை ஈரானிய கடற்படைப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கை – பெலாரஸ்: வான் வழி போக்குவரத்து குறித்து ஒப்பந்தம் கைச்சாத்து!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் மேற்படி ஒப்பந்தங்களை பரிமாற்றிக்கொண்டனர். குறித்த ராஜதந்திர நகர்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார மற்றும் பயணப் பரிமாற்றங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, பெலாரஸ் வெளிவிவகார […]

இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் அஞ்சலி!

  • May 14, 2026
  • 0 Comments

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை அடைந்தது. இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் […]

இலங்கை செய்தி

மின்னல் தாக்கி இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • May 14, 2026
  • 0 Comments

மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியான பெருந்துயர் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் மாநகர சபைக்கே சொந்தம்: தீர்மானம் நிறைவேற்றம்

  • May 14, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாழ். மாநகர சபைக்கே முழுமையாக உரித்தானது என்றும், அதில் எவரும் அத்துமீறி உள்நுழைய முடியாது என்றும் யாழ். மாநகர சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாநகர சபைக்கான முதலீடுகளும் சொத்துக்களும் சபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மேயருமான திருமதி […]

இலங்கை கல்வி

சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்!பொலிஸார் வலை

  • May 14, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். […]

ஐரோப்பா

உக்ரைனால் வந்த வினை – லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா பதவி விலகினார்!

  • May 14, 2026
  • 0 Comments

லாட்வியப் பிரதமர் எவிகா சிலினா (Evika Silina) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யாவை நோக்கிச் சென்ற உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் லாட்விய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில்  அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்  ஆண்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸை ( Andris Spruds) சிலினா பதவிநீக்கம் செய்திருந்தார். சிலினாவின் இந்த நடவடிக்கைக்கு ஸ்ப்ரூட்ஸின் முற்போக்குக் கட்சி அதிருப்தி தெரிவித்ததோடு, ஆளும் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் […]

உலகம்

பொதுமன்னிப்பு வழங்க தயாராகும் ட்ரம்ப் : பொது ஊழலை இயல்பாக்குவதாக விமர்சனம்!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, 250 ஜனாதிபதி மன்னிப்புகளை வழங்குவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் அவரது பிறந்த நாளான ஜூன் 14 அல்லது ஜூலை 4 அன்று வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ட்ரம்ப் பதவியேற்றபொழுது ஜனவரி 6 கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை பல அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்பை கொண்டுவந்தது. இந்நிலையில் தற்போது மீண்டுமொருமுறை இந்த நடவடிக்கை […]

உலகம்

தீர்க்கப்படாத பிரச்சினைகள் – இன்னும் பல மாதங்களுக்கும் தொடரும் மோதல் போக்கு!!

  • May 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான மோதல், தீர்க்கப்படாத முக்கியப் பிரச்சினைகள் காரணமாக பல மாதங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதாக  அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ இயக்குநரான லியோன் பனெட்டா (Leon Panetta) எச்சரித்துள்ளார். முக்கியமான உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும், அது நடைமுறையில் “நமது தலையில் துப்பாக்கியை வைத்திருப்பது” போல உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் அல்லது தரைப்படைகளை நிலைநிறுத்துவதன் செயல்திறனையும் அவர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தேடப்படும் 12 குற்றவாளிகள் – ஸ்பெயின் செல்வோருக்கு எச்சரிக்கை!

  • May 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தேடப்படும் 12 குற்றவாளிகள் ஸ்பெயினில் தங்கியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமை (NCA) ,  ஸ்பானிய காவல்துறை மற்றும் கிரைம்ஸ்டாப்பர்ஸ் ஆகியவை இன்று தங்களின் சமீபத்திய “குற்றவாளிகள் பட்டியலை” வெளியிட்டன. இதற்கிடையே ‘ஆபரேஷன் கேப்டூரா’வின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் 111 குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் பெரும்பாலும் ஸ்பெயினில் உள்ள வெளிநாட்டினரை தேர்ந்தெடுத்து சட்டவிரோத செயல்களை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]