பாதுகாப்பு அச்சுறுத்தல் – லிதுவேனியாவில் களமிறக்கப்படும் ஜெர்மனியின் இராணுவ வீரர்கள்
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள், நேட்டோவின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்க உதவும் வகையில், பெலாரஸ் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிதுவேனியாவில் சுமார் 5,000 ஜெர்மானிய வீரர்கள் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லிதுவேனியாவின் வெளியுறவு அமைச்சர் கெஸ்டுடிஸ் புட்ரிஸ் ( Kęstutis Budrys) , பெலாரஸிலிருந்து சில தன்னிச்சையான நடவடிக்கைகள் வருவதாகவும், அவை பெரும்பாலும் லித்துவேனியாவுக்கு எதிரான கலப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும் கூறினார்.
அத்துடன் ரஷ்யாவின் விரிவாக்கத்தை நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உதாரணமாக, இடம்பெயர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல், நாட்டின் வான்வெளியை மீறுவதற்கு வானிலை பலூன்களைப் பயன்படுத்துதல், அத்துடன் நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சியினரை பெலாரஸ் பாதுகாப்பு சேவைகள் துன்புறுத்துதல் போன்றவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தெரிவித்த அவர், “அவர்கள் அணு ஆயுதங்களையும், ஒரேஷ்னிக் ஏவுகணைகளையும் நிலைநிறுத்துகிறார்கள். அவர்கள் நமது உள்கட்டமைப்பைப் பயன்படுத்துகிறார்கள். பெலாரஸைப் பயன்படுத்துவதற்கான தளவாடத் திறன் அவர்களிடம் உள்ளது.
லுகாஷென்கா உண்மையில் நமது பொருளாதாரத்தை இராணுவமயமாக்கியுள்ளார். சுமார் 300 பெலாரசிய நிறுவனங்கள் ரஷ்யாவிற்காக இராணுவப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன எனக் கூறினார்.




