ஐரோப்பா

”உக்ரைனின் சுதந்திரம் “விற்பனைக்கு இல்லை” : செலன்ஸ்கி திட்டவட்டம்!

  • March 3, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மனக் கசப்பான சம்பவங்களை தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் தனது அதிகாரிகள் மீண்டும் பேசுவதை அவர் உறுதிப்படுத்துகிறார். ஐரோப்பிய மற்றும் உலகத் தலைவர்கள் மற்றும் மன்னர் சார்லஸுடனான ஒரு நாள் சந்திப்பிற்குப் பிறகு லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, தனது நாட்டின் சுதந்திரம் “விற்பனைக்கு இல்லை” என்று கூறினார். அத்துடன் உக்ரைன் நேட்டோவில் சேர முடிந்தால் தான் […]

பொழுதுபோக்கு

விஜய் குறித்து பிரியங்கா சோப்ராவின் அம்மா உடைத்த ரகசியம்

  • March 3, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது, சினிமாவில் தனது கடைசி படத்தில் நடித்து கொடுத்துவிட்டு முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் அம்மா விஜய் குறித்தும் தமிழன் படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “தமிழன் படத்தில் நடிப்பதற்கு முதலில் பிரியங்கா சோப்ரா ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவரது தந்தை இந்த படத்தில் பிரியங்கா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் தன் […]

ஐரோப்பா

குழந்தைகளின் தனிப்பட்ட தரவு நடைமுறைகள் தொடர்பாக TikTok, Reddit மீது இங்கிலாந்து விசாரணை

  • March 3, 2025
  • 0 Comments

சிறுவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க டிக்டாக், ரெடிட் தளங்கள் மீதும் படங்களைப் பகிரும் இணையத்தளமான ‘இமஜர்’ மீதும் பிரிட்டனின் தகவல் ஆணையர் அலுவலகம் மார்ச் 3ஆம் திகதி விசாரணை மேற்கொண்டுள்ளது. சிக்கல்மிகுந்த படிமுறைகளைப் பயன்படுத்தும் சமூக ஊடக நிறுவனங்கள், தங்களின் பயனாளர்களைத் தொடர்ந்து தக்கவைத்திட, உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை வழங்குவது வழக்கம். இருப்பினும், தீங்கிழைக்கக்கூடிய உள்ளடக்கத்தை அதிகப்படியாகக் காட்டுவதால் அவற்றின் மூலம் சிறார்கள் தவறான முறையில் ஈர்க்கப்படலாம். இந்நிலையில், 13 வயது முதல் 17 வயது வரையிலான பிரிவினரின் தனிப்பட்ட […]

இலங்கை

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

  • March 3, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேவேளை வரும் ஏப்ரல் மாதம் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

‘நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி’-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • March 3, 2025
  • 0 Comments

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் தன்னுடைய மனைவி அபிராமியை பங்குதாரர்களாக வைத்து ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனம் மூலம் ஜக ஜால கில்லாடி என்கிற படத்தை தயாரித்து. அப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர். இப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த கடனை 30 சதவீதம் […]

உலகம்

போர் அபத்தமாக தோன்றுகிறது – மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ்

  • March 3, 2025
  • 0 Comments

உலகில் இடம்பெறும் போர் அபத்தமாக தோன்றுகிறது என்று வாட்டிகன் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அமைதி கோரி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உக்ரைன், லெபனான், மியான்மர், சூடான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் நிலவும் போர் வன்முறைகளை பற்றி கவலை தெரிவித்துள்ளார். தமது உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்யும் அன்பர்கள் அனைவரும் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி அந்த அறிக்கையில் போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவமனையில் உயிருடன் போராடி சிகிச்சை பெற்று […]

உலகம் செய்தி

ஒரே மாதத்தில் 16,000 பேர் பணிநீக்கம் – உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை

  • March 3, 2025
  • 0 Comments

உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் கடந்த மாதம் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது. இந்த நிறுவனங்களை மறுசீரமைத்தல், செலவுகளைக் குறைத்தல், ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டெக் நிறுவனங்கள் பலரும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 16,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் […]

பொழுதுபோக்கு

Oscars 2025 : பல விருதுகளை தட்டித்தூக்கிய படம்… முழு விபரம்

  • March 3, 2025
  • 0 Comments

ஆஸ்கார்ஸ் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை டச்சு மொழி திரைப்படமான ‘ஐ’ம் நாட் எ ரோபோ’ பெற்றது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில் அனோரா திரைப்படம் தான் அதிக விருதுகளை வென்றுள்ளது. அப்படம் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மிகே மேடிசன்), சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய ஐந்து பிரிவுகளில் அனோரா படத்துக்கு விருது கிடைத்தது. அடுத்ததாக தி […]

இலங்கை

இலங்கையின் இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு எச்சரிக்கை

  • March 3, 2025
  • 0 Comments

இலங்கையின் கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் கூறப்படுகிறது. மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம்!

  • March 3, 2025
  • 0 Comments

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் 4 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரத்தில் டோலமிக் காலத்தைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான அரிய பழங்காலக் கலைப்பொருள்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இப்பகுதியில் […]