உலகம்

கரோலினாவில் மோட்டார் சைக்கிள் பேரணி – 19 பேர் காயம்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா – கரோலினாவில் நேற்று நடைபெற்ற வருடாந்திர மோட்டார் சைக்கிள் பேரணியில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி கவுண்டி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பொலிஸாருடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோர் விவகாரம் – கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தலிபான்களுக்கு அழைப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பும் செயன்முறை குறித்து விவாதிப்பதற்காக , தலிபான் அதிகாரிகள் பிரஸ்ஸல்ஸுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் தொழில்நுட்பக் கூட்டங்களை நடத்துவதற்காக ஸ்வீடன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான திதகிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் லேமர்ட் (Markus Lammert), […]

உலகம் செய்தி

இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை: ஈரான் தகவல்

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பது மற்றும் தற்காலிகப் போர்நிறுத்தம் போன்ற முக்கிய அம்சங்களில் இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது. அமைதி ஒப்பந்தம் இன்று இறுதிப்படுத்தப்படலாம் என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், ஈரானிய உயர்மட்டத் தலைமையுடன் தொடர்புகொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த நடைமுறை சற்று தாமதமாகி […]

ஐரோப்பா செய்தி

ஸ்டர்ஜன்–முரெல் வீடு சோதனையில் நீல கூடாரம் – பொலிஸார் விளக்கம்

  • May 25, 2026
  • 0 Comments

ஆபரேஷன் பிரான்ச்ஃபார்ம் (Operation Franceform) விசாரணையின் போது அமைக்கப்பட்ட நீல நிற தடயவியல் கூடாரம் குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர் முன்னாள் முதல் அமைச்சர் Nicola Sturgeon (நிக்கோலா ஸ்டர்ஜன்)மற்றும் முன்னாள் SNP தலைமை நிர்வாகி Peter Murrell (பீட்டர் முரெல்)ஆகியோரின் வீட்டில் 2023 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கூடாரம் அமைக்கப்பட்டது. விசாரணையின் ஒருங்கிணைப்பையும் ஆதாரங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொள்வனவு செய்த பொருட்களில் சில இன்னும் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

குதிரை வேகத்தில் குதிரை பேரம்: இதுவா தூயசக்தி?

  • May 25, 2026
  • 0 Comments

“தூயசக்தி என சுயதம்பட்டம் அடித்த தவெக, தற்போது குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலை முன்னெடுத்துவருகின்றது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மூவர், பதவி துறந்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையிலேயே ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் : ஒருவர் உயிரிழப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் கிழக்கு சசெக்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் நபர் ஒருவர் சுகவீனமுற்றுள்ளதாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த குழுவினர் அவரை பரிசோதனை செய்த பின் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் இதில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டின் இதுவரையிலான வெப்பமான நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்று சுமார் 32.3°C வெப்பநிலை பதிவானது. இது […]

பொழுதுபோக்கு

இயக்குநர் சேரனின் தாயார் மரணம்

  • May 25, 2026
  • 0 Comments

இயக்குநர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (25) தனது 84 வயதில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சேரனின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமலா பாண்டியன் அவர்களின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் வைத்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

செய்தி பொழுதுபோக்கு

திரைப்படத் துறையினரின் கோரிக்கை ஏற்பு: முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • May 25, 2026
  • 0 Comments

புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், மற்றும் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை கடந்த மே 16 ஆம் திகதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோயை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கிய சீனா!! வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம்!

  • May 25, 2026
  • 0 Comments

ஒரு துளி இரத்தத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையிலான தொலைப்பேசி ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும், இது நோயை எளிதாகவும் சரியான நேரத்திலும் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோயைக் கண்டறிய பொதுவாகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், பரிசோதனைகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயை குணப்படுத்துவதிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது. இதற்கு தீர்வாக தொலைப்பேசி வடிவிலான கருவியை சீன விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் புதிய கருவியில் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை முடக்க சதி: சுரேஷ் குற்றச்சாட்டு!

  • May 25, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஒட்டுமொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசு தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் […]