அறிவியல் & தொழில்நுட்பம்

புற்றுநோயை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கிய சீனா!! வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம்!

ஒரு துளி இரத்தத்தில் இருந்து நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய உதவும் வகையிலான தொலைப்பேசி ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகும், இது நோயை எளிதாகவும் சரியான நேரத்திலும் கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயைக் கண்டறிய பொதுவாகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், பரிசோதனைகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயை குணப்படுத்துவதிலும் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது.

New light sensor for disease diagnosis

இதற்கு தீர்வாக தொலைப்பேசி வடிவிலான கருவியை சீன விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இந்தப் புதிய கருவியில் உள்ள ஒரு சென்சார், மூலக்கூறுகள் ஒளியை பயன்படுத்தி புற்றுநோயை கண்டறிய உதவி செய்கிறது.  இதற்கு 3D சிப் பயன்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் புற்றுநோயை எளிதாக வீட்டிலேயே கண்டறிய முடியும். வழக்கமான ஆய்வகப் பரிசோதனைகளுடன் ஒப்பிடும்போது, ​​உணர்திறனில் கிட்டத்தட்ட “10,000 மடங்கு மேம்பாட்டிற்கு” இது சமமாக தொழிற்படுவதாக  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்கள் சயின்ஸ் எக்ஸ் டயலாக் இதழில் (Science X Dialog) பிரசுரிக்கப்பட்டுள்ளன.

 

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!