இயக்குநர் சேரனின் தாயார் மரணம்
இயக்குநர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (25) தனது 84 வயதில் உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சேரனின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமலா பாண்டியன் அவர்களின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் வைத்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





