ஐரோப்பா

பிரான்சில் கடும் வெப்பம் – எழுவர் உயிரிழப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

பிரான்சில் கடும் வெப்பம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பா மற்றும் போர்ச்சுகளில்  வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பிரான்சில் உயிரிழந்தவர்களில், கடும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீச்சல் குளங்களில் குதித்த பலரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இங்கிலாந்திலும் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று (25) பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை செய்தி

‘படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும்’ – யாழில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை!

  • May 26, 2026
  • 0 Comments

பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார். வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை […]

உலகம்

தென்கொரியாவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து – மூவர் பலி!

  • May 26, 2026
  • 0 Comments

தென் கொரியத் தலைநகரான சியோலில் பழமையான மேம்பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 03 பேர் உயரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமைவாய்ந்த சியோசோமுன் (Seosomun)  மேம்பாலத்தை இடிப்பதற்காக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

விரைவில் மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு , “தேர்தலுக்கான நிதி […]

இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு?

  • May 26, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள நிலங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து, பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை வட பகுதிக்கு நேரில் வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஜயத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ள முக்கிய நிலப்பரப்புகள் குறித்த விவரங்கள் வருமாறு:- பாதுகாப்புப் படையினரின் இன்றைய […]

உலகம்

ஈரானில் முடிவுக்கு வருகிறது இணைய முடக்கம்!! கட்டுப்பாடுகள் நீடிக்கலாம்!

  • May 26, 2026
  • 0 Comments

பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் இணைய முடக்கத்தை அறிவித்திருந்தது. இந்த முடக்கம் கடந்த 03 மாதங்களாக அமுலில் உள்ள நிலையில் அதனை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இணைய முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர  நேற்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும், நெட்பிளாக்ஸ் (NetBlocks) போன்ற சுயாதீன கண்காணிப்பு அமைப்புகள், நாடு முழுவதும் இணைய இணைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. தடைகள் நீக்கப்பட்டாலும், இணையக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகம்

தைவானை சுற்றி இராணுவ பயிற்சி : பரபரப்பை ஏற்படுத்திய சீனா!

  • May 26, 2026
  • 0 Comments

தைவானைச்  சுற்றி சீனா இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜே-16 ரகப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட 21 சீன விமானங்களை கண்டதாக தைவான் குறிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் தைவானுக்கு அருகில் சீனா மேற்கொள்ளும் இரண்டாவது  இராணுவப் பயிற்சி இதுவாகும். இதைத் தொடர்ந்து, தைவான் தனது சொந்தக் கப்பல்களையும் போர் விமானங்களையும் கண்காணிப்புக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. தைவான் விவகாரம் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

  • May 26, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய், நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார். பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்கும் நோக்கிலேயே அவரது டெல்லி வியம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

லெபனான் தாக்குதல் தொடர்ந்தால் அமீரகம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் – ஆய்வாளர் எச்சரிக்கை

  • May 26, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ஈரான் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “தற்போது இரண்டு முக்கிய பதற்ற நிலைகள் உருவாகியுள்ளன. ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில், மற்றொன்று லெபனானில். ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன், அந்த உடன்பாட்டிலிருந்து லெபனான் விவகாரத்தை தனியே பிரிக்க இஸ்ரேல் பிரதமர் […]

ஐரோப்பா

UKவில் சிறை கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : புதிய ட்ரோன் கலாசாரத்தால் நெருக்கடி!

  • May 26, 2026
  • 0 Comments

போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சிறைகளில் போதைப்பொருள் வியாபாரிகள் தண்டனையின்றி செயல்படுவதாக பிரித்தானியாவின் சிறைச்சாலைகளின் தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர்  ( Charlie Taylor) எச்சரித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025-இல்   இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் 48 போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2010-ஆம் ஆண்டில் இருந்ததை விட 2,300 ஆல் அதிகரித்துள்ளது. சிறைகளுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதே இந்த அதிகரிப்புக்கு […]