பிரான்சில் கடும் வெப்பம் – எழுவர் உயிரிழப்பு!
பிரான்சில் கடும் வெப்பம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஐரோப்பா மற்றும் போர்ச்சுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பிரான்சில் உயிரிழந்தவர்களில், கடும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீச்சல் குளங்களில் குதித்த பலரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இங்கிலாந்திலும் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று (25) பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




