ஐரோப்பா

சுவிஸில் கத்திக் குத்து தாக்குதல்! காணொளி இணைப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள  வின்டர்தூர் ரயில் நிலையமொன்றில் இன்று கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள்  28, 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது சுவிஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்தாரி “அல்லாஹு அக்பர்” என்று கத்துவதுபோன்ற காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://twitter.com/i/status/2059939030893035839

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!

  • May 28, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால் Tyre போன்ற முக்கிய நகரங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தெற்கு லெபனானில் எல்லையோரப் பகுதிகளில் இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டும் வேளையில், அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். […]

செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களுக்குரிய விசாவை உறுதி செய்யுமாறு FIFA விடம் கோரிக்கை!

  • May 28, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, தமது நாட்டு வீரர்களுக்கு அமெரிக்கா multiple-entry visa வழங்குவதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதி செய்ய வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் கால்பந்து அணி மெக்சிகோவின் டிஜுவானா நகரில் தங்கி பயிற்சி பெற திட்டமிட்டுள்ளதால், அங்கிருந்து அமெரிக்காவிற்குள் எளிதாக வந்து செல்ல இந்த விசா அவசியம் எனக் கருதப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் தனது பயிற்சி முகாமினை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து […]

செய்தி

பதிலடி: அமெரிக்கா வான்படை தளத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!

  • May 28, 2026
  • 0 Comments

தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவத் தளம் எந்த நாட்டில் அமைந்துள்ளது என்ற விபரத்தை ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும், அமெரிக்க ராணுவத் தளத்தைக் கொண்டுள்ள அண்டை நாடான குவைத், தனது வான்பரப்பில் நுழைந்த “பகைமை ஏவுகணைகள் […]

ஐரோப்பா செய்தி

ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் லண்டனில் தீவிரமடையும் கல்வி நெருக்கடி!

  • May 28, 2026
  • 0 Comments

கிழக்கு லண்டனின் Waltham Forest பெருநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தேசிய கல்விச் சங்கம் (NEU) மேற்கொண்டு வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன. கடந்த வாரம் வால்தம்ஸ்டோ நகரில் உள்ள South Grove ஆரம்பப் பள்ளி , ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டது. பள்ளிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்பு மறுசீரமைப்பு காரணமாகப் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, சிறப்புத் தேவையுடைய (Special Educational […]

ஐரோப்பா

மிதமிஞ்சிய வெப்பம் : தடை செய்யப்பட்ட நீர்நிலைகளை நாடும் பிரான்ஸ் மக்கள்!

  • May 28, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 09 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்  நீந்துவதற்கு நீண்டகாலமாக தடைவிதிக்கப்பட்டிருந்த செயிண்ட்-மார்ட்டின் கால்வாய்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்று, பாதுகாப்பு விதிகள் குறித்த நினைவூட்டல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும் காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் புறக்கணித்து அங்கு ஏராளமானோர் நீரில் இறங்கி குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் சக்திவாய்ந்த வெப்ப குவிமாடம் சூழ்ந்துள்ளமையினால்   பல இடங்களில் உச்சபட்ச வெப்பநிலை […]

இலங்கை செய்தி

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ரஷ்யா, இலங்கை பேச்சு!

  • May 28, 2026
  • 0 Comments

ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும் ரஷ்ய அரச ஆலோசகருமான   Aleksander Nikolayevich Venediktov வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். மே 26 முதல் 29 வரை மாஸ்கோவில் நடைபெற்று வரும் முதலாவது சர்வதேச பாதுகாப்பு மாநாடு மற்றும் பாதுகாப்பு விடயங்களுக்கான உயர்மட்ட பிரதிநிதிகளின் வருடாந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள பாதுகாப்பு செயலாளர் அங்கு விஜயம் செய்துள்ள நிலையில் […]

உலகம் செய்தி

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் மீண்டும் வலியுறுத்து!

  • May 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவால் முடக்கப்பட்ட தமது நாட்டின் சொத்துகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் Ali Bagheri Kani, மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பணத்தை மீட்பது ஈரானிய மக்களின் சட்டப்பூர்வ உரிமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து மேற்படி கோரிக்கை எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான […]

உலகம் செய்தி

ஈரான் போர் எதிரொலி: உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடி!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு நெருக்கடியை தூண்டியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் (IEA) பாத்திஹ் பிரோல் Fatih Birol எச்சரித்துள்ளார். இந்நிலைமையானது நாடுகளைத் தங்களின் முதலீட்டு உத்திகளை மாற்றியமைக்கவும், உள்நாட்டு வளங்களை நோக்கி நகரவும் கட்டாயப்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எண்ணெய் துறையிலான முதலீடுகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த உலகளாவிய எரிசக்தி முதலீடு 2026-ஆம் ஆண்டில் 3.4 டிரில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

சிறை கைதியுடன் தொலைபேசி உரையாடல்!! முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

  • May 28, 2026
  • 0 Comments

கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதி ஒருவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுமார் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் அவரிடம் சுமார் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பாரதூரமான குற்றங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.