முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் மீண்டும் வலியுறுத்து!
அமெரிக்காவால் முடக்கப்பட்ட தமது நாட்டின் சொத்துகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் Ali Bagheri Kani, மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பணத்தை மீட்பது ஈரானிய மக்களின் சட்டப்பூர்வ உரிமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து மேற்படி கோரிக்கை எழுந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலில், பறிமுதல் செய்யப்பட்ட நிதியைத் திரும்பப் பெறுவதை ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையாக முன்வைக்கிறது.
இவ்வாறு ஈரான் தனது பொருளாதார உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்காவிற்குப் பகிரங்கமாக அழுத்தம் கொடுத்துள்ளது என்பதை ஈரான் அரச ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.




