உலகம் செய்தி

ஹெப்ரோனில் இப்ராஹிமி மசூதி மூடல் – இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரில் அமைந்துள்ள இப்ராஹிமி மசூதியை இஸ்ரேலியப் படைகள் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மசூதியில் தொழுகை செய்தவர்களையும், காவலர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய வீரர்கள் உத்தரவிட்டதாக மசூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மற்றும் நுழைவாயில்களும் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை குறித்து பலஸ்தீனத்தின் வக்ஃப் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சகம் […]

இலங்கை செய்தி

யாழில் மீனவர்கள் மாயம்: தேடுதலை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் பணிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் […]

இலங்கை செய்தி

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி விஷமருந்தி தற்கொலை முயற்சி: நுவரெலியாவில் பரபரப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) நண்பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற இலக்கமுடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, சந்தேக நபரான உடபுஸ்ஸல்லாவ, தொடம்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் குற்றம் புரிந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின், அவருக்கு மரண தண்டனை […]

உலகம் செய்தி

போர்நிறுத்த மீறல் – காசா தாக்குதல்களுக்கு பலஸ்தீன் கடும் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை பலஸ்தீன அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இத்தாக்குதல்கள் “அழித்தொழிப்பு, படுகொலை மற்றும் நாசவேலைப் போர்” என அவர்கள் விவரித்துள்ளனர். மேலும், இது சர்வதேச சட்டங்களையும், போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளையும் வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த நாடுகள் மற்றும் உத்தரவாத நாடுகள், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, பலஸ்தீன மக்களுக்கு எதிரான […]

ஆஸ்திரேலியா செய்தி

லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Tony Abbott!

  • May 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சி தற்போது சந்தித்து வரும் பாரிய அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, முன்னாள் பிரதமர் டோனி அபோட் Tony Abbott அக்கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், வரும் தேர்தலில் அங்கஸ் டெய்லர் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே தனது முக்கிய நோக்கம் என Tony Abbott அறிவித்துள்ளார். சமீபத்திய தேர்தல் தோல்விகளால் பலவீனமடைந்துள்ள லிபரல் கட்சி, தற்போது தீவிர வலதுசாரி கொள்கைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதை […]

செய்தி விளையாட்டு

FIFA WORLD CUP: மெஸ்ஸி தலைமையில் Argentina அணி அறிவிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

2026 ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண தொடரை முன்னிட்டு, நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைமைப்பதவி மெஸ்ஸியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை உலக்கிண்ண தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.மொத்தம் 48 அணிகள் களம் காண்கின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

சர்வதேச கடல் பகுதியில் அத்துமீறல்: இஸ்ரேல் படைகள் குறித்து பிரான்ஸ் விசாரணை!

  • May 29, 2026
  • 0 Comments

காசாவுக்கு உதவிப் பொருட்களைக் ஏற்றிச்சென்ற மனிதாபிமானக் கப்பலில் இருந்த பிரான்ஸ் பிரஜைகள், இஸ்ரேலியப் படைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர் எனக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பிரான்ஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வ செயற்பாட்டாளர்கள், பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் துருக்கியிலுள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரி உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் […]

இந்தியா செய்தி

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்பவுள்ளனர். ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது. அதில் இருந்த இந்திய மாலுமிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் காரணமாக இந்திய மாலுமிகள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையில் அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுப் பாதுகாப்பு, மக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அதேவேளை ஒட்டுமொத்த பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாயத்துக்கு அத்தியாவசியமாக விளங்கும் விநியோகங்கள் மற்றும் சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கை […]

உலகம் செய்தி

‘அமைதி முயற்சி’ – பாகிஸ்தான், மலேசியாவுக்கு ஈரான் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

போர் சூழ்நிலைக்கு மத்தியிலும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றார். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர மலேசியா மற்றும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதியாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்து துறைகளிலும் முஸ்லீம் நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே ஈரானின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. தனது சமூக […]