உலகம் செய்தி

கடுமையான இஸ்ரேலிய கட்டுப்பாடுகளையும் மீறி அல்-அக்ஸாவில் 60,000 பலஸ்தீனியர்கள் தொழுகை

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தபோதிலும், சுமார் 60,000 பலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை அல்-அக்ஸா மசூதியில் தொழுகையில் கலந்துகொண்டனர். ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் மசூதி வளாக நுழைவாயில்களில் இஸ்ரேலியப் படைகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்ததாக இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் மசூதி முற்றங்களுக்கு வரத் தொடங்கினர். பழைய நகரம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டதுடன், மசூதி வாயில்கள் மற்றும் ஜெருசலேம் சுற்றியுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. வழிபாட்டாளர்களின் அடையாள அட்டைகள் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வெப்ப உயர்வால் அதிகரிக்கும் மரணங்கள்! சிறுவன் உயிரிழப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக நீர் நிலைகளில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை என்றும், இதுகுறித்த அறிக்கை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்றும் ஸ்காட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளுக்கு வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலைமையானது நீர் தொடர்பான மரணங்கள் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் இலங்கை சாதனை: சர்வதேசப் பட்டியலில் 18-வது இடம்!

  • May 29, 2026
  • 0 Comments

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் இலங்கை, சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஊடகமான TTW – Travel and Tour World வெளியிட்டுள்ள “2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 50 பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள்” என்ற மதிப்புமிக்க சர்வதேசப் பட்டியலில் இலங்கை 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்படி சர்வதேசப் பட்டியலில் இந்தியா, பிரான்ஸ், பெரு, ஸ்பெயின் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முன்னிலை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

  • May 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்   சமையல், குளியல் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு நீர் இன்றி மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக விட்ஸ்டபிள் மற்றும் ஹெர்ன் பே  (Herne Bay) உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் கஃபே போன்ற வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கும், உள்ளூர் பொருளாதாரம் குறித்த கவலைகளுக்கும் வழிவகுத்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட அதிக தேவையே […]

இலங்கை செய்தி

ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரின் மைத்துனர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

  • May 29, 2026
  • 0 Comments

திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் மைத்துனர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே 25 வயதான இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 2045 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

மேற்குக் கரையில் இஸ்ரேலின் டிஜிட்டல் நிலப் பதிவு திட்டம் – ‘ஆபத்தான காலனித்துவ நடவடிக்கை’ என பலஸ்தீனம் குற்றச்சாட்டு

  • May 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சொத்துரிமைகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் இஸ்ரேலின் புதிய திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நிலப் பதிவேடு மற்றும் உரிமைத் தீர்வு” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஒன்லைன் தளம், மேற்குக் கரையில் நில உரிமைகளை “புதுப்பிக்கும்” நோக்கத்துடன் செயல்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், பலஸ்தீன நில ஆணையம் இந்த நடவடிக்கையை “சட்ட மற்றும் வரலாற்று உரிமைகள் மீதான நேரடி தாக்குதல்” என்றும், “ஆபத்தான காலனித்துவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் தலிபான்கள் களமிறக்கப்படுவார்களா? ரஷ்யாவின் புதிய வியூகம்!

  • May 29, 2026
  • 0 Comments

தலிபான்களுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் ரஷ்யா ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.. இதன்மூலம் தலிபானுடனான உறவுகளை ஆழப்படுத்துவதோடு, ஆப்கானிஸ்தானில் உள்ள அதன் ஆட்சியை அங்கீகரித்த உலகின் ஒரே நாடு என்ற தனது தனித்துவமான அந்தஸ்தையும் நிலைநிறுத்தியுள்ளது. சர்வதேச பாதுகாப்பு மன்றம்” என்றழைக்கப்பட்ட நிகழ்வொன்றில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2025-ல் தலிபான் குழுவை அதிகாரப்பூர்வ அரசாங்கமாக ரஷ்யா அங்கீகரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வருகின்றன. ரஷ்யாவோ அல்லது ஆப்கானிஸ்தான் தரப்போ இராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்திலும் லெபனானில் 15 குழந்தைகள் உயிரிழப்பு – யுனிசெஃப் அதிர்ச்சி

  • May 29, 2026
  • 0 Comments

லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 62 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதல்களே இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ பிரஸ் இதுகுறித்து தகவல் வெளியிட்டார். “கடந்த ஏழு நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் […]

உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம் – மேலும் லெபனான் மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்

  • May 29, 2026
  • 0 Comments

லெபனானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அன்சாரியா, அல்-க்ராயெப், ஷப்ரிஹா, சரஃபந்த், அட்லூன் மற்றும் பைசாரியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக “ஸஹ்ரானி நதிக்கு வடக்கே செல்ல வேண்டும்” என்று இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அதனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இராணுவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் தரப்பு அறிக்கையில் […]

உலகம் செய்தி

ஹெப்ரோனில் இப்ராஹிமி மசூதி மூடல் – இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரில் அமைந்துள்ள இப்ராஹிமி மசூதியை இஸ்ரேலியப் படைகள் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மசூதியில் தொழுகை செய்தவர்களையும், காவலர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய வீரர்கள் உத்தரவிட்டதாக மசூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மற்றும் நுழைவாயில்களும் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை குறித்து பலஸ்தீனத்தின் வக்ஃப் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சகம் […]