வாட்ஸ்அபில் (WhatsApp) திடீரென ஏற்பட்ட சிக்கல் – பலரின் கணக்குகள் முடக்கம்
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் பலர், எந்த விளக்கமும் இன்றி, தங்கள் கணக்குகள் மர்மமான முறையில் நீக்கப்பட்டதாகவோ அல்லது முடக்கப்பட்டதாகவோ தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு, சேவை விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக அவர்களின் கணக்குச் செயல்பாடு மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், 24 மணி நேரத்திற்குள் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிவிப்பொன்று அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சில நேரங்களில் தாங்கள் தவறாகக் கணக்குகளைத் தடை செய்வதை வாட்ஸ்அப் ஒப்புக்கொள்கிறது, ஆனால் தவறான பயன்பாடு, ஸ்பேம், மோசடிகள் அல்லது பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் வாதிடுகிறது.
அதிகாரப்பூர்வமற்ற செயலிப் பதிப்புகளைப் பயன்படுத்துதல் அல்லது “ஸ்கிராப்பிங்” (scraping) (தானியங்கி தரவுப் பிரித்தெடுத்தல்) போன்றவை தடைகளுக்கான காரணங்களாக இருக்கலாம்; இந்த நடத்தை தொடர்ந்தால், தற்காலிகத் தடைகள் நிரந்தரத் தடைகளாக மாறக்கூடும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர் பாதுகாப்பிற்கான விதிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதே வேளையில், தவறாக இடைநிறுத்தப்பட்ட கணக்குகளை “முடிந்தவரை விரைவாக” மீட்டெடுக்க தாங்கள் பணியாற்றி வருவதாக வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.




