இலங்கை செய்தி

சுரேஷ் சலே தொடர்பான விசாரணை – CIDஇற்கு அழைப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

சுரேஷ் சலே தொடர்பான தொடர்பான  விசாரணைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சுரேஷ் சலேயின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தகவல் கோர மனித உரிமை ஆணைக்குழு முன்னதாகவே சி.ஐ.டிக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், சி.ஐ.டியினர் மற்றொரு திகதியை கோரியிருந்தனர். இந்நிலையில் சுரேஷ் சலே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மீளவும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்காக ‘புலிப்புராணம்’ ஓதுகிறது மஹிந்த அணி!

  • June 9, 2026
  • 0 Comments

” புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என சுட்டிக்காட்டியே ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அச்சட்டத்தை பயன்படுத்தியே சுரேஷ் சலேவை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் […]

ஐரோப்பா

இணையத்தில் பாலியல் துஷ்பிரயோகம் : புதிய சட்டங்களை கொண்டுவர ஸ்டாமர் முயற்சி!

  • June 8, 2026
  • 0 Comments

“இணையத்தில் குழந்தைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது அரசாங்கம் வேடிக்கை பார்க்காது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கடுந் தொனியில் எச்சரித்துள்ளார். குழந்தைகள் ஆபாசப் படங்களை அனுப்புவதையோ அல்லது பெறுவதையோ தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லையென்றால்  சில மாதங்களுக்குள் புதிய சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற லண்டன் டெக் வீக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது […]

உலகம்

6,000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை ஏற்றுக்கொண்டது அமெரிக்கா!

  • June 8, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட 6,000 அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் அனைவரும் வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட ஒரு குறிப்பாணையில், “தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் ஆப்பிரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆண்டொன்றிற்கு 7500 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை ஏற்றுக்கொள்ளவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய தற்போதுவரை 6000 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள், வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் இனரீதியான துன்புறுத்தலையும் […]

உலகம்

நியூயார்கில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கத்திகுத்து தாக்குதல்!!

  • June 8, 2026
  • 0 Comments

நியூயார்க் நகரத்தின் பரபரப்பான பென் ஸ்டேஷனுக்குள் ( Penn Station) நேற்று கத்திகுத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர்  ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த சிலமணி நேரங்களிலேயே தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவிருந்த NBA இறுதிப் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தை காண ஜனாதிபதி ட்ரம்ப் வருகை […]

உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ கடற்கரைக்கு அப்பால் பதிவாகிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து  பல ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 15 பேர் பலி! 129 பேர் காயம்!

உலகம்

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி!

  • June 8, 2026
  • 0 Comments

தனியார் ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. டொமினிகன் குடியரசில் உள்ள லா ரொமானா (La Romana International Airport) சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில்  விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாக டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த அவசரநிலை […]

ஐரோப்பா

சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை!

  • June 8, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பிரதேசத்தை மொரிஷியஸுக்கு வழங்க பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில் சட்ட சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம்  திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா இராணுவத் தளத்தை உள்ளடக்கிய இந்தத் தீவுகளை வாங்கும் யோசனையை, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 16 எலும்புக் கூடுகள் அடையாளம்!

  • June 8, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன. இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிழையான சத்திர சிகிச்சைகள் – NHSஐ நாடும் மக்களுக்கு அதிர்ச்சி!

  • June 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS மருத்துவ சேவையில் இடம்பெற்ற பல முறைக்கேடுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒருபோதும் நிகழக்கூடாத 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமை  அல்லது  பிழையான சத்திரச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது சுகாதார சேவையில் உள்ள முக்கிய தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வுகளில் 166 தவறான  சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு செய்ய வேண்டிய சத்திரசிகிச்சை தவறுதலாக மாறி வேறு […]