உலகம் செய்தி

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புமீது ஈரான் கடும் அதிருப்தி!

  • June 8, 2026
  • 0 Comments

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei , கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது முன்வைக்கப்படும் எந்தவொரு கண்டனத் தீர்மானத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையும் பிராந்தியத்தின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அணுசக்தி நிலையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான […]

உலகம்

ஜப்பானின் நகரமொன்றில் அனைத்து தொடக்கப் பாடசாலைகளையும் மூட நடவடிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

ஜப்பானிய நகரமான உட்சுனோமியாவில் (Utsunomiya) உள்ள அனைத்து தொடக்க பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் முதல் முறையாக கரடி ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் இதுவரை அக்கரடி பிடிபடவில்லை. கடைசியாக அந்த கரடி பாடசாலையொன்றுக்கு அருகில் காணப்பட்டதாக கூறப்பகிறது. இதனைத் தொடர்தே பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் முழுவதும் கரடித் தாக்குதல்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் வேளையில் இந்தச் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு NPP அரசுக்கு வலுக்கிறது அழுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல முழு நாட்டுக்கும் மாகாணசபை முறைமை அவசியம். எனவே, மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பது தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தலை […]

செய்தி விளையாட்டு

விசா சர்ச்சைக்கு மத்தியில் மெக்சிக்கோவில் களமிறங்கியது ஈரான் அணி!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் உலகக் கோப்பை கால்பந்து அணி மெக்சிகோவில் உள்ள டிஹுவானா (Tijuana) நகரில் தரையிறங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக துருக்கியில் பயிற்சி பெற்று வந்த ஈரானிய அணி, அங்கிருந்தே நேற்று மெக்சிக்கோ வந்துள்ளது. தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைக்குமா என்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஈரானிய கால்பந்து சம்மேளனம் , பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் முதன்மைப் பயிற்சி முகாமை அரிசோனாவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்றியது. ஈரான் அணி விளையாடவிருக்கும் முதல் போட்டிக்கு வெறும் 10 […]

உலகம்

இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • June 8, 2026
  • 0 Comments

கொலம்பியா – மிசோரியில் (Missouri) உள்ள இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகே நேற்று துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஏறக்குறைய 09 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள்  புளோரிடாவில் உள்ள பயிற்சி முகாமில் இருந்தமையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக […]

உலகம்

தென்கொரியாவில் சிறை கைதிகளுக்கு குளிரூட்டும் (AC)வசதியை வழங்குவதற்கு எதிர்ப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தென்கொரியாவில் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகளுக்கு  குளிரூட்டும் வசதியை வழங்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, சிறைகளில் குளிரூட்டும் அமைப்பை மேம்படுத்துவது என்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைதிகளையும் சீர்திருத்த அதிகாரிகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. அத்துடன் இந்த திட்டத்திற்கு 1.2 பில்லியன் வோன் ($779,000) செலவாகும் என்று நீதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சகம், குளிரூட்டிகள் சிறை அறைகளில் அல்லாமல் நடைபாதைகளில் நிறுவப்படும் என்றும், […]

உலகம் கல்வி

போர் நிறுத்த ஒப்பந்தமீறலுக்கு அமெரிக்காவே பொறுப்பு: ஈரான் சீற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei குற்றம் சாட்டியுள்ளார். பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கக் கொள்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. வாஷிங்டனின் நேரடி ஆதரவு இன்றி இஸ்ரேலால் இத்தகைய அத்துமீறல்களைச் செய்ய இயலாது எனவும் Esmaeil Baghaei சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் தலையீடே முதன்மைக் காரணம் என ஈரான் கருதுகின்றது.

உலகம்

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை! பதற்றத்தை எதிர்கொள்ள தயார்!! ஹூதிகள் முழக்கம்!

  • June 8, 2026
  • 0 Comments

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், உறுதிப்படுத்தியுள்ளனர். “எங்கள் மக்கள் மீதான இந்த அநியாயமான முற்றுகையின் முன் நாங்கள்  அமைதியாக இருக்க மாட்டோம்,” என்று அந்த அமைப்பு இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி அறிக்கையில், ஜாஃபா துறைமுக நகரில் உள்ள “இஸ்ரேலின் முக்கிய இலக்குகள்” மீது ஏவுகணைகளை வீசியதாகவும், அந்த ஏவுகணைகள் அதன் […]

உலகம் செய்தி

போர் பதற்றம்: எகிறியது எண்ணெய் விலை: சரிந்தது பங்கு சந்தை!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மீண்டும் போர் வெடித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் US-traded crude எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 சதவீதத்திற்கும் மேலாக கணிசமாக உயர்ந்துள்ளன. அதேவேளை, போர் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ள நிலையில், ஆசியப் பங்குச் சந்தைகள் திங்களன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன. குறிப்பாக, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. சர்வதேச சந்தை வல்லுநர்கள் இந்த ராணுவ […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 15 பேர் பலி! 129 பேர் காயம்!

  • June 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 129 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக Soccsksargen பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இப்பகுதியில் நான்கு மாகாணங்களும் ஒரு நகரமும் உள்ளடங்கியுள்ளன. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!