உலகம்

ஓடுபாதையில் விபத்துக்குள்ளான ஜெட் விமானம் – இருவர் பலி!

தனியார் ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

டொமினிகன் குடியரசில் உள்ள லா ரொமானா (La Romana International Airport) சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில்  விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாக டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்த அவசரநிலை ஏற்பட்டபோது, ​​குறித்த ஜெட் விமானம்  டெக்சாஸின் ஆஸ்டின் நகருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தை அறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்