உலகம்

“, அது நடந்திருக்கக்கூடாது” : இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை!

  • June 14, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் இன்று முன்னெடுத்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டித்துள்ளதுடன், அது நடந்திருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுடனான தற்போதைய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் வலியுறுத்தினார். வடக்கு இஸ்ரேலில் உள்ள சமூகங்களை நோக்கி ஹிஸ்புல்லா குழு மூன்று எறிகணைகளை வீசியதற்குப் பதிலடியாகவே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. ஹிஸ்புல்லாவின் […]

உலகம்

எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • June 14, 2026
  • 0 Comments

தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $1.1 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் கணிசமான பங்காகும். மஸ்கின் வணிகப் பேரரசின் முக்கிய அங்கமாக விளங்கும், ராக்கெட், செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சேர்ந்த விரிவான நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஆரம்பப் பொதுப் பங்களிப்பில் (IPO) சாதனை அளவாக $75 பில்லியனை வெற்றிகரமாகத் திரட்டியதுடன், வர்த்தகத்தின் முதல் […]

உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் 73000 பாலஸ்தீனியர்கள் கொலை!

  • June 14, 2026
  • 0 Comments

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 73,001 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்டோபர் 7, 2023 அன்று தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 173,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட பலவீனமான போர் நிறுத்தம் அமுலில் உள்ளபோதும் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

இனம் அல்லது மதம் பேதமின்றி அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். புதிதாக கட்டப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், பொதுமக்களுக்குத் திறமையான, நம்பகமான மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவது இலங்கை பொலிசாவின் முக்கியப் பொறுப்பாகத் தொடர்கிறது என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண […]

கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி முதல் அணுசக்தி வரை : இறுதி ஒப்பந்தத்தின் வரைவு வருமாறு

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தொடர்பில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்திப் பணிகள் முதல் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் எண்ணெய் தடைகள் மீதான அமெரிக்காவின் விலக்குகள் வரை பலதரப்பட்ட பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் ஈரானும் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து வரும் 60 நாட்களில் இரு தரப்பினருக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். குறித்த வரைவு […]

இந்தியா

ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்தியக் கப்பல்!

  • June 14, 2026
  • 0 Comments

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று சேதமடைந்து விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் 1′ என்ற  பாய்மரக் கப்பல் ஒன்று அதன் இயந்திர கோளாறின் காரணமாக சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த 14 மாலுமிகளை அமெரிக்க கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மத்தியக்கிழக்கு கடற்பகுதிகளில் நிலவும் போர் பதற்றங்களில் 03 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஓமானின் ராஸ் அல் ஹத் கடற்கரையிலிருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் […]

ஐரோப்பா

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சுவிட்ஸர்லாந்து : வாக்கெடுப்பு நிறைவு!

  • June 14, 2026
  • 0 Comments

நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவு தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இன்று பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதில் வாக்காளர்கள் வாக்கெடுப்பை நிராகரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் தொழிலாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் இருதரப்பு சந்தை அணுகல் தொடர்பாக பிரஸ்ஸல்ஸுடன் உடனடி மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆரம்பகட்ட முடிவுகளின்படி, கிட்டத்தட்ட 54 சதவீதமான வாக்காளர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்துள்ளனர். 2050-ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கும் குறைவாக […]

ஐரோப்பா

பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் அதிவேக ரயில் சேவை!

  • June 14, 2026
  • 0 Comments

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் ஒரு புதிய அதிவேக ரயில் இணைப்பு அடுத்த வருடத்தில் (2027) சோதனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் இடையேயான ரயில் சேவையை  பேசல் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை   SNCB, SNCF Voyageurs மற்றும் சுவிஸ் ஃபெடரல் ரயில்வேஸ் (SBB) ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்கின்றன. இந்த சோதனை ஓட்டமானது குறுகிய தூர விமானப் பயணங்களுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி […]

உலகம்

பெய்ரூட்டில் இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!

  • June 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு பெய்ரூட்டில் இன்று புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டதாக லெபனானின் உத்தியோகபூர்வ தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா கட்டளை மையத்தை குறிவைத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பதிலடியாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே தாக்குதல்களுக்கு முன்னதாக, “பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான” நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது. மேலும் ஹிஸ்புல்லா […]

இலங்கை

கந்தளாயில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

  • June 14, 2026
  • 0 Comments

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கேலே – சோமாவதி காப்பகத்தில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் நன்கு வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்றைக் கண்டறிந்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு சுமார் 18,750 கஞ்சா செடிகள் இருந்துள்ளன.   ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாக, கந்தளாய் கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் பி. செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் கோட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப […]