இலங்கை

கந்தளாயில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கேலே – சோமாவதி காப்பகத்தில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் நன்கு வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்றைக் கண்டறிந்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு சுமார் 18,750 கஞ்சா செடிகள் இருந்துள்ளன.

 

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாக, கந்தளாய் கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் பி. செனவிரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் கோட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்