ஐரோப்பா

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சுவிட்ஸர்லாந்து : வாக்கெடுப்பு நிறைவு!

நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவு தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இன்று பொது வாக்கெடுப்பை நடத்தியது.

இதில் வாக்காளர்கள் வாக்கெடுப்பை நிராகரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் தொழிலாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் இருதரப்பு சந்தை அணுகல் தொடர்பாக பிரஸ்ஸல்ஸுடன் உடனடி மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆரம்பகட்ட முடிவுகளின்படி, கிட்டத்தட்ட 54 சதவீதமான வாக்காளர்கள் இந்த முன்மொழிவை எதிர்த்துள்ளனர்.

2050-ஆம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கும் குறைவாக வைத்திருப்பதை ஒரு அரசியலமைப்பு இலக்காக நிர்ணயிக்கும் சர்ச்சைக்குரிய முன்மொழிவை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்திருந்தது.

குடியேற்றம், வீட்டு வசதி செலவுகள், பொது சேவைகள் மீதான அழுத்தம் மற்றும் உள்கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்த கவலைகளால் இந்த முன்மொழிவு உந்தப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 7.2 மில்லியனிலிருந்து 2026-ல் 9 மில்லியனுக்கும் சற்று அதிகமாக உயர்ந்துள்ளது.

இவர்களில் சுமார்   64 சதவீதமானோர்  ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்