உலகம் செய்தி

எகிப்து துறைமுக சேமிப்பு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

  • July 30, 2026
  • 0 Comments

ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை புதன்கிழமை இரவு நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள டாமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் (gas storage tanker) மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பிரித்தானிய கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே (Ambrey) தனது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவித்தது. எகிப்தின் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்திய போதிலும், ட்ரோன் தாக்குதல் குறித்து […]

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஆளுநரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • July 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று டார்வின் நகரில் நடைபெற்ற ‘என்.டி தாய்லாந்து பிரமாண்ட திருவிழா’வின் (NT Thailand Grand Festival) போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ஆளும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை இன்று […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இலங்கை செய்தி

நீதித்துறை தொடர்பான அரசின் முடிவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி

  • July 30, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் அனைத்து […]

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பெற்றோரை இழந்து தவிக்கும் 60,000 காசா குழந்தைகள்

  • July 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்தது 60,737 குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளனர் . இதில் 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும், 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். மேலும், 8,858 பேரைக் கொண்ட 2,276 குடும்பங்கள் “சிவில் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும்” மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை "கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

ஜோர்தானிலுள்ள அமெரிக்க இலக்குமீது ஈரான் தாக்குதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்

  • July 29, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை “கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது” என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Fox News அலைவரிசைக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். அவர்களுக்கு பலத்த அடி காத்திருக்கிறது,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய இத்தாக்குதலை ஒரு “திடீர் தாக்குதல்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், […]

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் - தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக்கொடி போராட்டம்

  • July 29, 2026
  • 0 Comments

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் படகுகளில் கடலுக்குள் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு உடனடியாக நடவடிக்கை கோரி அவசரக் கோரிக்கை மனுவையும் கையளித்தனர். காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி […]

இலங்கை

பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூல் – வவுனியாவில் மருத்துவமனை ஒன்றுக்கு 500000 அபராதம்

  • July 29, 2026
  • 0 Comments

முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்ததமைக்காக வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் (CAA), தனது புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இதனை கண்டுப்பிடித்துள்ளது. அந்த மருத்துவமனை, இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை அவர்கள் கண்டறிந்தனர். விசாரணையைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அந்தத் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை […]

உலகம்

ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் – அமெரிக்காவுக்கு கைக்கொடுத்த சவுதி அரேபியா

  • July 29, 2026
  • 0 Comments

ஈராக்கில் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் மீது ஈரான் பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி மீதான மோதலைத் தீர்க்கும் நோக்கில் ஓமான் ஒரு புதிய பிராந்திய ஒப்பந்தத்தை முன்மொழிந்த வேளையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உலகம்

நியூயார்க்கில் ரோபோவை ஆசிரியராக அறிமுகப்படுத்தும் திட்டம் இடைநிறுத்தம்

  • July 29, 2026
  • 0 Comments

நியூயார்க்கின் கிராமப்புற பகுதிகளில் , சாலி என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனித உருவ ரோபோவை ஆசிரியராக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சலமன்கா நகர பாடசாலை நிர்வாகம் 60,000 டொலர் மதிப்பிலான இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. தரவு தனியுரிமை, ரோபோவின் கற்பித்தல் பங்கு, மற்றும் பாலியல் பொம்மைகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்துடன் உற்பத்தியாளரான ரியல்போட்டிக்ஸ் தொடர்புக்கொண்டுள்ளதன் காரணமாக இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூயார்க் மாநில […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதிலும், குறிப்பாக நப்லஸ் (Nablus) பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன. உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 20 பாலஸ்தீனர்கள் கைது

  • July 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதிலும், குறிப்பாக நப்லஸ் (Nablus) பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன. இரவு நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய திடீர் சோதனைகளின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் (Palestinian Prisoner’s Society) தெரிவித்துள்ளது. முற்றுகையிடப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதி முழுவதும் இஸ்ரேலின் இராணுவ ஊடுருவல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலிலேயே இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வீடுகளிலோ […]