ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 20 பாலஸ்தீனர்கள் கைது
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதிலும், குறிப்பாக நப்லஸ் (Nablus) பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன.
இரவு நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய திடீர் சோதனைகளின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் (Palestinian Prisoner’s Society) தெரிவித்துள்ளது.
முற்றுகையிடப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதி முழுவதும் இஸ்ரேலின் இராணுவ ஊடுருவல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலிலேயே இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ உள்ள மக்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறையும் அதிகரித்துள்ளது.




