உலகம் செய்தி

அணு ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அணு ஒப்பந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போர் நிறுத்தம் அல்லது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருவதுடன், அதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, ஈரான் தங்கள் அணு திட்டம் முழுமையாக குடிமைப் பயன்பாட்டுக்காக மட்டுமே எனவும், மின்சாரம் […]

பொழுதுபோக்கு

சரிகமபவில் அதிரடி Entry! கதறி அழுத தந்தை

  • May 3, 2026
  • 0 Comments

சரிகமப நிகழ்ச்சியில் 11 ஆவது போட்டியாளராக Wild card மூலம் மகதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சரிகமபவில் நேற்று Wild card சுற்று நடைபெற்றது. எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். அனைத்து போட்டியாளர்களும் திறமையாக பாடியிருந்ததால் யார் இறுதிப் போட்டியாளர் என்ற குழப்பம் பார்வையாளர்களிடம் இருந்தது. இந்த நிலையில் மகதி இறுதி போட்டிக்குள் நுளைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத மகதியின் தந்தை கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

இந்தியா

டெல்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து – 09 பேர் உடல்கருகி பலி!!

  • May 3, 2026
  • 0 Comments

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள  குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வயது குழந்தை உட்பட 09  பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இன்று அதகாலை தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீ கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களுக்கு பரவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கட்டிடத்திற்குள் இருந்த பத்துக்கும் […]

இலங்கை முக்கிய செய்திகள்

VAT வரியை அதிகரிக்க முன்மொழிவு – புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

  • May 3, 2026
  • 0 Comments

திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி,  ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு VAT வரி அறவிடப்படும். இதற்காக டிஜிட்டல் சேவைகள் மீதான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிரதான சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி விதிக்கத்தக்க காலப்பகுதியின் முடிவில், இலங்கைக்குள் […]

உலகம்

லெபனானில் கோர தாண்டவம் ஆடும் இஸ்ரேல் – 13 பேர் பலி!

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்   13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான சண்டை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

பெரு பொதுத் தேர்தல் : சிறப்பு தணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் அழைப்பு!

  • May 3, 2026
  • 0 Comments

பெருவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவு தொடர்பில் “விரிவான மற்றும் முழுமையான தகவல் தொழில்நுட்பத் தணிக்கை” நடத்த வேண்டும் என அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தேர்தலின் முதல் கட்டத்தின் இறுதி முடிவுகள் இன்னும் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 97.5% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையடையவில்லை. ஜூன் மாதம் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில், பழமைவாத முன்னணியாளரான […]

உலகம்

இணையவழி அச்சுறுத்தல் – வடகொரியா மீது குற்றச்சாட்டு!

  • May 3, 2026
  • 0 Comments

பியோங்யாங் இணையவழி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை வட கொரிய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. வொஷிங்டனின் நீண்டகால விரோதக் கொள்கையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வட கொரியாவிலிருந்து “இல்லாத ‘இணையவழி அச்சுறுத்தல்’” இருப்பதாக அமெரிக்கா அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் “நமது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு அபத்தமான அவதூறு தவிர வேறொன்றுமில்லை” என்றும் விவரித்துள்ளது.

இலங்கை செய்தி

திறைசேரி நிதி மோசடி: FBI உதவியை நாடியது இலங்கை?

  • May 3, 2026
  • 0 Comments

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை புலனாய்வாளர்கள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் FBI உதவியை நாடியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் ஊடுருவல் தாக்குதல்களைக் கண்டறிந்து தணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தையும் இலங்கை விசாரணைப் பிரிவு தொடர்பு கொண்டுள்ளது. மோசடி மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தன, திறைசேரியிலிருந்து மோசடியாகத் திசை திருப்பப்பட்ட நிதி எங்கே உள்ளது, இந்த மோசடிக்குப் […]

உலகம்

கச்சா எண்ணெய் விலையில் சரிவு – வெனிசுலாவிற்கு ஜாக்பொட்!

  • May 3, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் காட்டியுள்ளது. அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 101.9 அமெரிக்க டொலராகவும், ஒரு பேரல் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 108.2 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. மேலும், ஒரு பேரல் மர்பான் கச்சா எண்ணெயின் விலை 103.8 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் […]

ஐரோப்பா

லண்டனில் துப்பாக்கிச்சூடு – உயிருக்கு போராடும் இளைஞர்!

  • May 3, 2026
  • 0 Comments

லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்  மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட்ஹார்பர் (Coldharbour) லேனில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.