உலகம்

பெரு பொதுத் தேர்தல் : சிறப்பு தணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் அழைப்பு!

பெருவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவு தொடர்பில் “விரிவான மற்றும் முழுமையான தகவல் தொழில்நுட்பத் தணிக்கை” நடத்த வேண்டும் என அந்நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தேர்தலின் முதல் கட்டத்தின் இறுதி முடிவுகள் இன்னும் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 97.5% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையடையவில்லை.

ஜூன் மாதம் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில், பழமைவாத முன்னணியாளரான கெய்கோ ஃபுஜிமோரியை எதிர்கொள்ள, தெளிவான ஜனாதிபதி வேட்பாளர் யாரும் இன்னும் உருவாகவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“தேர்தல் முடிவுகளின் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக” சுதந்திரமான தணிக்கைக்கு அவ் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்