உலகம்

நேட்டோ பாதுகாப்பு செலவீனம் – நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் 05 நாடுகள்

  • July 7, 2026
  • 0 Comments

ஐந்து நேட்டோ உறுப்பு நாடுகள் 2026-ஆம் ஆண்டிலேயே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தை பாதுகாப்பு செலவீனத்திற்காக ஒதுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காராவில் நடைபெறவிருந்த   உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, இன்று  நேட்டோ வெளியிட்ட  புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நேட்டோவில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடுகள் 02 சதவீதத்தை மட்டுமே ஒதுக்க நிர்ணயித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டணி உறுப்பு நாடுகள், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என அமெரிக்க […]

உலகம்

நேட்டோ உச்சிமாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மீண்டும் தலைத்தூக்கியது கிரீன்லாந்து விவகாரம்

  • July 7, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் டென்மார்கிற்கு அல்ல. மாறாக  அமெரிக்காவின் வசமே இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள துருக்கி சென்றுள்ள ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாட்டுப் பிரச்சினை, நேட்டோவுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் கிரீன்லாந்து டென்மார்க்கிற்கு உதவுவதில்லை என்றும், டென்மார்க் கிரீன்லாந்துக்கு உண்மையாக உதவ பணம் செலவழிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் […]

உலகம்

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு – 04 பேர் பலி

  • July 7, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மவாசி பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் மேற்கு காசா நகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடார முகாமுக்கு அருகே நடந்த மற்றொரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், […]

ஐரோப்பா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் நைஜல் ஃபாரேஜ்

  • July 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சீர்த்திருத்த யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபாரேஜ் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி நன்கொடைகள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது  உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சிறப்புத் தேர்தலில் மீண்டும் தனது தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. தனது தனிப்பட்ட செல்வம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன், நான் […]

உலகம்

புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கியை ஆரம்பிக்க 09 நாடுகள் இணக்கம்

  • July 7, 2026
  • 0 Comments

புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கிக்கு ஆதரவளிக்க 09 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாட்வியா, லக்சம்பர்க், ருமேனியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் அனைத்தும் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பலதரப்பு பாதுகாப்பு, மற்றும் மீள்திறன் வங்கியின் (DSRB) ஆரம்பக் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வரையறுத்து, அதன் செயல்பாடுகளை வடிவமைக்கும் என்றும் கார்னி கூறினார். 100 […]

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகம் செய்தி

‘அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது’- ஈரான் திட்டவட்டம்

  • July 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடருமானால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவரது பாரம்பரியத்தையும் கவுரவிக்கும் நோக்கில் அவரது இறுதிப் பேரணியில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பெருமையுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றுகூடினர். மக்களோ, ஈரானின் வீரமிக்க ஆயுதப்படைகளோ எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சவில்லை.” எனவும் அவர் சூளுரைத்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவு ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல்கள் […]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு

  • July 7, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு – கிழக்கு […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு உளவுத் தகவல்கள் பகிர்வு – இத்தாலியில் இரு முன்னாள் இராணுவத்தினர் கைது

  • July 7, 2026
  • 0 Comments

இத்தாலியில் உளவுத் தகவல்களை ரஷ்ய உளவாளிகளுக்கு பகிர்ந்துகொண்ட குற்றசாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் உளவுத்துறையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோம் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சந்தேகபர்களின் பெயரை வெளியிடாத வழக்கறிஞர் அலுவலகம், கராபினேரி இராணுவக் காவல்துறையின் 59 வயது முன்னாள் அதிகாரி என்றும், உளவுத்துறையின் ஒரு பகுதியாகப் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்தது, அத்துடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை அனுமதியின்றி […]

இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல் – விசாரணைக்கு மூவரடங்கிய விசேட குழு நியமனம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். […]

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

கைதி தற்கொலை முயற்சி: மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு

  • July 7, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். […]