நேட்டோ உச்சிமாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மீண்டும் தலைத்தூக்கியது கிரீன்லாந்து விவகாரம்
கிரீன்லாந்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் டென்மார்கிற்கு அல்ல. மாறாக அமெரிக்காவின் வசமே இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள துருக்கி சென்றுள்ள ட்ரம்ப், அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிரீன்லாந்தின் மீதான கட்டுப்பாட்டுப் பிரச்சினை, நேட்டோவுடனான அமெரிக்காவின் உறவுகளைப் பாதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கிரீன்லாந்து டென்மார்க்கிற்கு உதவுவதில்லை என்றும், டென்மார்க் கிரீன்லாந்துக்கு உண்மையாக உதவ பணம் செலவழிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த தீவு பகுதி அமெரிக்காவிற்கு முக்கியமானது என வலியுறுத்திய அவர், அது சீன மற்றும் ரஷ்யக் கப்பல்களால் சூழப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.




