இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சுறா தாக்குதலில் இருந்து மீண்ட பெண்ணின் உருக்கமான பதிவு

  • August 24, 2026
  • 0 Comments

இவ்வாண்டின் தொடக்கத்தில் சிட்னியின் பிரபல கடற்கரையில் சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கான ஆஸ்திரேலியப் பெண் ஒருவர், தனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் குஜி (Coogee) கடற்கரையில் காலை வேளையில் நீந்திக் கொண்டிருந்த 35 வயதான லியா ஸ்டீவர்ட் (Leah Stewart) என்ற ஒரு குழந்தையின் தாய், சுறா மீனின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் […]

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்

  • August 24, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் […]

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர் கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் Andy Burnham முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன் விஜயம்

  • August 24, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக Andy Burnham, உக்ரைன் தலைநகர்  கிவ் (Kyiv) நகருக்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டிற்கான பிரித்தானியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளார். முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் காலத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்ட “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” (Coalition of the Willing) அமைப்பின் முதல் கூட்டத்திற்குப் பிரதமர் Andy Burnham தலைமை தாங்குவார். […]

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை தீவிரம்

  • August 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு’ அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு குறித்தும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. […]

இலங்கை செய்தி

நாடு முழுவதும் கடும் வறட்சி – 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ நிகழ்வால் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 81,865 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. அத்துடன் 23 பிரதேச செயலக பிரிவுகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பதாகவும், அவர்களுக்கு நீர் வழங்க பிரேதச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. அதன்படி, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச அளவில் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழு பிரதேச செயலகப் […]

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே டைம்ஸ்'' ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அவசர இலங்கை விஜயத்தின் பின்னணி என்ன?

  • August 24, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே டைம்ஸ்” ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள தனது முதல் பயணத்தின் போது, ​​ ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை வகிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் […]

உலகம்

பொருளாதாரத் தடை – எண்ணெய் ஏற்றுமதியை தடுப்போம் என ஈரான் சபதம்

  • August 24, 2026
  • 0 Comments

ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்டு மாபெரும் பொருளாதார தடையை இன்று முதல் அமுல்படுத்தவுள்ளதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில் பொருளாதாரப் போர் தொடர்ந்தால்” வளைகுடாவிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடுவோம் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரான் மீது அதிகளவிலான பொருளாதாரத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் பொருளாதாரத் தடை அந்நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே போரிடும் நாடுகள் பல வாரங்களாக ஒன்றுக்கொன்று […]

உலகம்

கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு

  • August 24, 2026
  • 0 Comments

கினியாவின் தலைநகரான கொனாக்ரியில் Conakry,  கனமழையால்  குப்பை மேடு சரிந்து விழுந்ததில், 30 பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும்  22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெபெசியா Gbessia  கம்யூனில் உள்ள டார் எஸ் சலாம் Dar Es Salam திறந்தவெளி குப்பைக்கிடங்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள கூடாரங்கள், குடிசைகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மீது கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இடிந்து விழுந்த குப்பைகளுக்கு அடியில் புதைந்திருந்தவர்களைக் கண்டறிய, அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு […]

இந்தியா

மகாராஷ்டிராவில் மகளிர் மருத்துவமனையில் தீவிபத்து – 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு

  • August 24, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள NICU-வில் இருந்த வென்டிலேட்டர் திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​NICU-வில் சுமார் 39 பச்சிளங்குழந்தைகள் இருந்தன. பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குழந்தைகளை அந்தப் பிரிவிலிருந்து […]

ஐரோப்பா

UKவில் உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட மேயர்களுக்கு அனுமதி

  • August 23, 2026
  • 0 Comments

உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட அனுமதிக்கும் புதிய அதிகாரங்களை இங்கிலாந்து மேயர்களுக்கு பிரதமர் ஆண்டி பர்னம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான திட்டமிடல் முடிவுகளில் மேயர்கள் முடிவெடுப்பதற்கு ஏற்றவகையில் இந்த அதிகாரம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கமைய மேயர்கள் இனி 150-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட மேம்பாட்டுத் திட்டங்கள், 15,000 சதுர மீட்டருக்கும் அதிகமான வணிக வளாகங்கள், அல்லது குறைந்தது 30 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் […]