உலகம்

ஈரானை மூர்க்கமாக தாக்கிய அமெரிக்கா – 08 இராணுவத்தினர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 08 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

சீனாவில் சீரற்ற வானிலை : நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, டான்சாங் (Tanchang) கவுண்டியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசுக்குச் சொந்தமான ஒரு வனவியல் பண்ணையில் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 33 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு

  • July 8, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் 112 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. குறிப்பாக பார்சிலோனாவில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திற்கு மிக அருகில், மத்தியதரைக் கடலுக்கு அருகே அமைந்துள்ள பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில், வெப்பநிலைமானி 37.7°C ஐ எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1924 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளில் மிக உயர்ந்த அளவாகும் என தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான AEMET தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் தற்போது நிலவி வரும் வெப்பநிலையானது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மேல்நிலை பாடசாலையொன்றில் பதற்ற நிலை

  • July 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலையொன்றில் இன்று மாணவர் ஒருவர் இரு மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். ஷோங்காவில் (Schongau)  உள்ள வெல்ஃபென்(Welfen) உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதுடைய குறித்த மாணவர் கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும்  அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் படுகாயம் அடைந்த இரு […]

உலகம்

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நிலச்சரிவு – குழந்தைகள் பலர் பலி

  • July 8, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் இன்று பெய்த கனமழையினால் மதராஸா பாடசாலையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதில் எட்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன்,  ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் குறித்த பாடசாலையில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சைக்காக முகாம்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், மழையால் ஏற்பட்ட தனித்தனி நிலச்சரிவுகளில், முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரச் […]

ஐரோப்பா

ஈழத்து மைந்தன் நிஷான் கனகராஜாவிற்கு பிரித்தானியாவின் உயரிய பட்டம் வழங்கி கௌரவிப்பு

  • July 8, 2026
  • 0 Comments

இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்றவருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியா மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நிஷான் கனகராஜா வின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அங்கு பணியாற்றி வருகிறார். வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு விழாவில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ்  ‘நைட்’பட்டத்தை வழங்கி கௌரவித்தார். உயர் கல்வித் துறைக்கு, குறிப்பாக கல்வியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, அவருக்கு இந்த பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி […]

ஐரோப்பா

ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு விசா தடை விதிப்பது தொடர்பில் ஆய்வு

  • July 8, 2026
  • 0 Comments

ரஷ்ய வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விசா வழங்குவதைத் தடைசெய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை, குறுகிய கால விசாக்களுக்கும், உக்ரைனில் நடந்த சண்டையில் நேரடியாகப் பங்கேற்றவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்காக, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 21ஆவது பொருளாதாரத் தடைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் […]

கிழக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம் இலங்கை செய்தி

கிழக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்

  • July 8, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன் , கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், குச்சவெளி, வெருகல் மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

எந்தவொரு குற்றச்சாட்டுகளுமின்றி 18 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐ.நா. சபையின் விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. உலகம் செய்தி

18 மாதங்களாக விசாரணையின்றி சிறை: காஸா வைத்தியருக்காக ஐநா குரல்

  • July 8, 2026
  • 0 Comments

எந்தவொரு குற்றச்சாட்டுகளுமின்றி 18 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐ.நா. சபையின் விசாரணை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. காஸாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் 52 வயதான பணிப்பாளர் ஹுசாம் அபு சபியா (Hussam Abu Safia) தொடர்ச்சியான மற்றும் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்கான ஐநாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. தினசரி சித்திரவதைகள் காரணமாக டாக்டர் அபு சபியாவின் […]

ஐரோப்பா

குழந்தைகள் ஆபாச படங்களை கொள்வனவு செய்ய முயற்சி – ஐரோப்பிய நாடுகளில் 28 பேர் கைது

  • July 8, 2026
  • 0 Comments

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் பொருட்களை (படங்களை) வாங்கும் நோக்கில் செயற்பட்ட 28 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். டார்க் வெப்பில் உள்ள பல மன்றங்களை அணுகுவதற்காக, அந்த ஆண்கள் மொனெரோ என்ற கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பணம் செலுத்தியதாக நோர்வேயின் தேசிய குற்றப் புலனாய்வு சேவை கூறியுள்ளது. இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொள்ள 06 நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை ஜூன் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், […]