இந்தியா – சீனா எல்லைப் பேச்சு : பீஜிங் சென்றடைந்தார் அஜித் தோவல்!
இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். சீன வெளியுறவு அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினருமான வாங் யீயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள எல்லைப் பிரச்சினைக்கான 25ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், […]













