இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். இந்தியா செய்தி

இந்தியா – சீனா எல்லைப் பேச்சு : பீஜிங் சென்றடைந்தார் அஜித் தோவல்!

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். சீன வெளியுறவு அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினருமான வாங் யீயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள எல்லைப் பிரச்சினைக்கான 25ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், […]

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா உலகம் செய்தி

கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் எபோலா பரவல்: ஆப்பிரிக்காவில் தொடரும் கொடூர மரணங்கள்

  • August 24, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதுரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) மாகாணங்களில் புதிதாக 51 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் உதவியைக் கோரி திருத்தந்தை லியோ (Pope Leo) வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த […]

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நாட்டை நாசமாக்கியவர்கள் இன்று புதிய வேடம்

  • August 24, 2026
  • 0 Comments

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக்கொண்டு, நாமல் ராஜபக்ச இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் குளங்கள் […]

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அவசரமாக ஈரான் விரைகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி

  • August 24, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தர் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த விஜயத்தின் போது, […]

இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை செய்தி

79 வீதமான இலங்கையர்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டம்

  • August 24, 2026
  • 0 Comments

இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் எகனொமிக் ரைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் புதுடெல்லி எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் இந்தியாவை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்து, பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) ஒன்றை மேற்கோள்காட்டி, அண்மைய ஆய்வை மேற்கோண்ட ஆய்வில், 79 வீதமான […]

ஐரோப்பா

EUவின் கொள்கை புறக்கணிப்பு – எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மேம்படுத்த நோர்வே உறுதி

  • August 24, 2026
  • 0 Comments

பேரண்ட்ஸ் கடலில் உள்ள தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை நோர்வே தொடர்ந்து மேம்படுத்தும் என்று அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் டெர்ஜே ஆஸ்லாண்ட் Terje Aasland தெரிவித்துள்ளார். 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, நோர்வே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வழங்குநராக மாறியுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டின் எரிவாயு தேவையில் சுமார் 30 சதவீதத்தை  பூர்த்தி செய்கிறது. கடந்த ஆண்டு, நாட்டின் எரிவாயு உற்பத்தி சாதனை அளவில் உயர்ந்துள்ளது. அதே […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இரத்து

  • August 24, 2026
  • 0 Comments

கிராஸ்கன்ட்ரி நிறுவனம் நேற்று முதல் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான ரயில் சேவைகளை இரத்து செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கோளாறு காரணமாக முக்கிய மேலாண்மை அமைப்புகள் செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரயில் போக்குவரத்துக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட விமான சேவைகள் மற்றும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில்டர்ன் ரயில்வேஸ் Chiltern Railways மற்றும் எல்.என்.இ.ஆர் LNER உள்ளிட்ட மாற்று நிறுவனங்களால் ஞாயிற்றுக்கிழமை […]

உலகம்

கப்பல்களிடம் வரி வசூலிக்கும் சட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

  • August 24, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க தெஹ்ரானை அனுமதிக்கும் சட்ட வரைவுக்கு ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த சட்டவரைவு தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முந்தைய கூட்டத்தில் பரிசீலனையில் இருந்த 3-வது பிரிவுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததாக குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் காஷ்கவி Hassan Qashqavi  கூறினார். இந்தப் பிரிவு, ஜலசந்தியில் வழங்கப்படும் வழிசெலுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள், சிறப்பு […]

"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

NPPஐ வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பம்: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் அநுர

  • August 24, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நிலைப்பாடு நிலவுவதாகக் கூறுவதை எதிரணியினர் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வது உண்மையான அரசியல் எதிர்ப்பு நடவடிக்கை அல்ல” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராகத் திரண்ட மக்களை விடவும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் உள்ளனர்; எனவே மீண்டுமொரு போராட்டத்தை நடத்த நேரிடும்” என எதிரணி தரப்பில் முன்வைக்கப்பட்டு வரும் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு சிறப்பு விஜயத்தை மேற்கொள்ளும் சர்வதேச தலைவர்கள்

  • August 24, 2026
  • 0 Comments

உக்ரைனின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மற்றம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அந்நகருக்கு இன்று விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். அமெரிக்க செனட்டர்களான ரிச்சர்ட் ப்ளூமென்டல் மற்றும் ஜேம்ஸ் லேன்க்ஃபோர்ட் ஆகியோர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரஷ்யாவிடமிருந்து தொடரும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புகளின் அவசியம் குறித்து ஜெலன்ஸ்கி அவர்களுடன் கலந்தாலோசிப்பார் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் António Costa , லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃபிரைடன் […]