உலகம்

ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது : 90 இலக்குகளை அழித்த பிறகு ட்ரம்ப் கருத்து

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு அமெரிக்கா செல்ல தயாரான அவர், ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “அவர்கள் சற்று முன்பு அழைத்தார்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார். நேற்று இரவு ஈரானில் 90-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இந்திய பிரஜை பலி

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ நாளிதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பலியானவர் 73 வயதுடைய உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலேயே மிக கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இக்கலவரத்தில், படுகாயமடைந்திருந்த மேலும் ஒரு சிறை அதிகாரி புதன்கிழமை (ஜூலை 08, 2026) உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]

ஈரான்மீது தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்குள்ள சுமார் 90 இராணுவ இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் 90 ராணுவ இலக்குகள் அழிப்பு: அமெரிக்க ராணுவம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், அங்குள்ள சுமார் 90 இராணுவ இலக்குகளைத் தங்களது படைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்களின் வீடியோ தொகுப்புடன் எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மற்றும் அப்பாவி சிவிலியன் மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் முடக்குவதே” இந்தத் தாக்குதலின் நோக்கமாகும் என்று […]

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

ஆஸ்திரேலியாவில் மோடிக்கு அமோக வரவேற்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெல்பர்ன் நகரை சென்றடைந்துள்ளார். அந்நகரிலுள்ள டாக் lands மைதானத்தில் (Docklands Stadium) இந்தியப் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. “மெல்பர்ன் மீட்ஸ் மோடி” (Melbourne Meets Modi) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நிகழ்வில் 20,000-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என அமைப்பாளர்கள் கணித்துள்ளனர். அதேவேளையில், இந்தியாவில் மனித உரிமைகள் நிலை […]

செய்தி விளையாட்டு

மொராக்கோ அணிக்கு பின்னடைவு: நட்சத்திர வீரருக்கு காயம்

  • July 9, 2026
  • 0 Comments

பிரான்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்கான மொராக்கோ அணியின் திட்டங்களுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர முன்கள வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismael Saibari) இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா அணிக்கு எதிரான ‘லாஸ்ட்-16’ (சுற்று-16) சுற்று ஆட்டத்தின் போது சைபாரிக்கு தொடை தசைநார் (Hamstring) காயம் ஏற்பட்டது. இந்த முக்கிய நாக்-அவுட் போட்டிக்கு முன்னதாக அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்று அணியின் பயிற்சியாளர் முகமது […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பிலிருந்து பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 வெளிநாட்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது. மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை […]

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி

தாக்குதல்கள் உக்கிரம் – எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பு

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் , கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இரு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் நிலைபெற்றன. புதன்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 5%-க்கும் மேல் உயர்ந்து $78.02 ஆக நிலைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த […]

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொறுமை இழந்தது ஈரான் – பொங்கி எழுந்து எச்சரிக்கை

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார். மூலோபாய ரீதியாக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே இயங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீணான மிரட்டல்கள் அமெரிக்காவை மேலும் சிக்கலில் தள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரான்மீது அமெரிக்கா இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம்

ஈரானை மூர்க்கமாக தாக்கிய அமெரிக்கா – 08 இராணுவத்தினர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 08 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

சீனாவில் சீரற்ற வானிலை : நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, டான்சாங் (Tanchang) கவுண்டியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசுக்குச் சொந்தமான ஒரு வனவியல் பண்ணையில் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 33 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக […]