இந்தியா

மகாராஷ்டிராவில் மகளிர் மருத்துவமனையில் தீவிபத்து – 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பு

  • August 24, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள NICU-வில் இருந்த வென்டிலேட்டர் திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​NICU-வில் சுமார் 39 பச்சிளங்குழந்தைகள் இருந்தன. பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குழந்தைகளை அந்தப் பிரிவிலிருந்து […]

ஐரோப்பா

UKவில் உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட மேயர்களுக்கு அனுமதி

  • August 23, 2026
  • 0 Comments

உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட அனுமதிக்கும் புதிய அதிகாரங்களை இங்கிலாந்து மேயர்களுக்கு பிரதமர் ஆண்டி பர்னம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான திட்டமிடல் முடிவுகளில் மேயர்கள் முடிவெடுப்பதற்கு ஏற்றவகையில் இந்த அதிகாரம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கமைய மேயர்கள் இனி 150-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட மேம்பாட்டுத் திட்டங்கள், 15,000 சதுர மீட்டருக்கும் அதிகமான வணிக வளாகங்கள், அல்லது குறைந்தது 30 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் […]

ஐரோப்பா

காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஸ்டாக்ஹோமில் மாபெரும் பேரணி

  • August 23, 2026
  • 0 Comments

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்திற்கு எதிராக, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இன்று 10,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். சுவீடனில் வரும் செப்டம்பர் 13 ஆம் திகதியன்று  பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஸ்வீடன் வாக்காளர்களின் கவலைகளில் காலநிலை மாற்றம் முதன்மையானதாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்திலிருந்து வெளியாகும் CO₂ உமிழ்வை 70 சதவீதம் குறைத்தல் மற்றும்,  2045-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவது உள்ளிட்ட இலக்குகளுக்கு அரசாங்கத்தின் கொள்கை […]

ஐரோப்பா

ஈரான் ஹேக்கர்கள் தாக்குதல் – பிரித்தானியாவின் மின் உற்பத்தி நிலையம் முடக்கம்

  • August 23, 2026
  • 0 Comments

ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் நடத்திய இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஒரு சிறிய அளவிலான மின் உற்பத்தி நிலையம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜுலை மாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய இணையவழித் தாக்குதல் ஒன்று இங்கிலாந்தின் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை வெற்றிகரமாக முடக்கிய முதல் நிகழ்வு இது என்று நம்பப்படுகிறது. தேசிய இணையப் பாதுகாப்பு மையத்திற்கு (NCSC) இது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த மீறலால் […]

ஐரோப்பா

புகலிடம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தீர்மானம் – இத்தாலி கடும் எதிர்ப்பு

  • August 23, 2026
  • 0 Comments

இடம்பெயர்வு மற்றும் புகலிடம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள புதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்து இத்தாலிக்கும் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. புகலிடம் கோருவோரை அவர்கள் முதலில் நுழைந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், இரண்டாம் நிலை இடமாற்றங்கள் தொடர்பான விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்த ஏழாவது நாடாக அயர்லாந்து மாறியுள்ளது. அதேபோல் […]

இலங்கை

22வது அரசியலமைப்புத் திருத்தம் – பொது வாக்கெடுப்பு கோரும் தமிழரசுக் கட்சி

  • August 23, 2026
  • 0 Comments

முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் கட்சிக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் இறையாண்மையுடன் தொடர்புடையது என்று வலியுறுத்துகின்றனர். எனவே, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.  

ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஐரோப்பா

பழிக்குப் பழி – உக்ரைனின் பொருளாதார கட்டமைப்பை குறிவைக்கும் புட்டின்

  • August 23, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனின் முக்கிய பொருளாதார உள்கட்டமைப்புகளுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் பொருளாதார வசதிகளைக் குறிவைப்பதன் மூலம் கீவ் பண்டோரா பெட்டியை “Pandora’s box திறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள் மற்றும் பிற பொருளாதார சொத்துக்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், புடினின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், “கீவ் ஆட்சி நமது பொருளாதாரத்தைச் சேதப்படுத்தத் […]

இலங்கை

மட்டக்களப்பு – கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கோர விபத்து – இருவர் பலி

  • August 23, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லார் பிரதான சாலையில், கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். நேற்று இரவு சுமார் 9:21 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மோதலைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையை கடக்க தயாராக இருந்த 03 மாணவர்கள் மீது மோதியுள்ளது. இதில்  18 […]

ஐரோப்பா செய்தி

பொதுத் தேர்தல் உக்ரைனை அழித்து விடும் – ஜெலென்ஸ்கி

  • August 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போர் தொடரும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது, உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை “அழித்துவிடும்” என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இந்த வகையான போரின்போது தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்,” என்றார். இதற்கிடையே போர்க்காலத்தில் தேர்தல்கள் நடத்துவது உக்ரைனிய சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கியின் ஏற்பு விகிதம் […]

இலங்கை

முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான வயது எல்லை நிர்ணயம்

  • August 23, 2026
  • 0 Comments

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40ஆக உயர்த்தப்பட்டலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹெவாகே தெரிவித்துள்ளார். பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு இளம் தலைமுறையை […]