ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரான்மீது இன்றிரவும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீது புதன்கிழமையான இன்று இரவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில். கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுள்ள ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினார். இதன்போது இது பற்றி கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “கடந்த இரவில் நாம் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம். இன்று இரவும் அவர்கள் […]

இப்போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 8-வது கோலை பதிவு செய்து, தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான 'தங்கக் காலணி' (Golden Boot) விருதுப் பந்தயத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். செய்தி விளையாட்டு

Golden Boot பந்தயம்:மெஸ்ஸி மீண்டும் முதலிடம்

  • July 8, 2026
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் (Round of 16) சுற்றில் எகிப்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 8-வது கோலை பதிவு செய்து, தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான ‘தங்கக் காலணி’ (Golden Boot) விருதுப் பந்தயத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். உலகக் கிண்ணத் தொடரின் இறுதியில் அதிக கோல்களை அடிக்கும் வீரருக்கு FIFA தங்கக் காலணி […]

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

  • July 8, 2026
  • 0 Comments

அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அதற்கமைய, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் […]

உலகம்

ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் முற்றிலும் அவசியமானவை – மார்க் ரூட்டே

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் “முற்றிலும் அவசியமானவை” என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே  (Mark Rutte) இன்று தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் எறிகணைகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஈரான் மீதான தாக்குதல்களை முடக்கிவிட்டுள்ளது. தெஹ்ரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் ரத்து செய்தது. இது ஏற்கனவே பலவீனமாக இருந்த போர்நிறுத்தத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு முன்பு பேசிய […]

உலகம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல – ட்ரம்பிற்கு நினைவூட்டல்

  • July 8, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப், கிரீன்லாந்து வொஷிங்டனின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் எனக் கூறியமைக்கு டென்மார்க் பதிலளித்துள்ளது. கிரீன்லாந்து “விற்பனைக்கு அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெறவுள்ள  நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபிரடெரிக்சன், அமெரிக்காவின் நிலைப்பாடு மேலும் மேலும் வெளிப்படையாகி வருவதாக தெரிவித்தார். “நேற்று அமெரிக்க அதிபர் பேசியதைக் கேட்டேன், துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது […]

உலகம்

போர் பதற்றம் – ஐரோப்பிய, ஆசிய பங்குகள் சரிவு

  • July 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய, ஆசிய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஐரோப்பாவில், ஜெர்மனியின் DAX குறியீடு சுமார் 11 CEST அளவில் 2.2 சதவீதத்திற்கும் கீழே சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லண்டனின் FTSE 100 குறியீடு 1.5 சதவீதத்தாலும், பிரான்சின் CAC 40 குறியீடு 02 சதவீத்தினாலும் வீழ்ச்சிடையந்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கப் பங்குகள் […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு ட்ரம்ப் உத்தரவு

  • July 8, 2026
  • 0 Comments

அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப், ஸ்பெயின் மீதான தனது அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளார். அட்லாண்டிக் கூட்டணியில் ஸ்பெயினை ஒரு “மோசமான” கூட்டாளி என்று வர்ணித்த ட்ரம்ப், ஸ்பெயினுடனான “அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்குமாறு” கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிற்கு அறிவுறுத்தியுள்ளார். “ஸ்பெயின் ஒரு பயனற்ற முயற்சி. நாங்கள் இனி ஸ்பெயினுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்த […]

இலங்கை

சிறைச்சாலை வன்முறை : மற்றுமொரு காவலர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் இன்று உயிரிழந்தார். அதன்படி, மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த மோதல்களின் காரணமாக,  காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று காலை (08) வெலிக்கடை சிறைச்சாலைக்குக் […]

இலங்கை

சிறைச்சாலைக்கே பாதுகாப்பு இல்லை – மக்களின் நிலமை என்ன? : சஜித் கேள்வி

  • July 8, 2026
  • 0 Comments

சிறைச்சாலைக்குள் பாதுகாப்பை பலப்படுத்த முடியாமல் இருக்கும் அரசாங்கம், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் 220 லட்சம் மக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த போகிறது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (7.7) இடம்பெற்ற  சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை பிரகடன […]

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை உலகம் செய்தி

போர் பதற்றத்தால் மீண்டும் எகிறியது எண்ணெய் விலை

  • July 8, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பரபரப்பான அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலையானது திடீரென ஆறு சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 78 டாலராக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அரசுப் பத்திரங்களின் வருவாயும் (Government Bond Yields) அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர்ச் சூழல் வெடித்துள்ளதால், […]