இலங்கை

கல்முனையில் சோகம் – பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய நபர் பலி

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனைக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பேருந்தின் அடியில் சிக்கிய நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்தில் கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 36 வயதுடைய  தியாகராஜா ஜெயகிருஸ்ணன்  என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்