ஐரோப்பா

ஜெர்மனியில் மேல்நிலை பாடசாலையொன்றில் பதற்ற நிலை

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலையொன்றில் இன்று மாணவர் ஒருவர் இரு மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஷோங்காவில் (Schongau)  உள்ள வெல்ஃபென்(Welfen) உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

16 வயதுடைய குறித்த மாணவர் கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும்  அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படுகாயம் அடைந்த இரு மாணவிகளும், ஆபத்தான நிலையில் இல்லை எனவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்தாரி தனியாகவே செயற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர் குவிந்தமையால் பதற்றமான சூழ்நிலையும் நிலவியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்