ஈரானை மூர்க்கமாக தாக்கிய அமெரிக்கா – 08 இராணுவத்தினர் உயிரிழப்பு
ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 08 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




